சே. வெ. சண்முகம்சே. வெ. சண்முகம் (பிறப்பு 1933) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1951 ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்தார். ஆரம்பத்தில் துறைமுகத்தில் பணியாளராகவும் பின்னர் 1961ல் கிடங்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி 1991ல் ஓய்வுபெற்றார். இவர் மனோகரன் எனும் இதழின் துணையாசிரியராகவும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இலக்கியப் பணி1949ம் ஆண்டு எழுதத் தொடங்கிய இவரின் ‘வேறு வழி இல்லையா’? எனும் முதல் சிறுகதை மதுரையிலிருந்து வெளியான ‘நேதாஜி’ எனும் வார இதழில் வெளிவந்தது. சிங்கப்பூரில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்த இவர் சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக் கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடைநாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், புதினம், நாடகத் தொடர்கள் என பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தார். இவரது படைப்புகள் பல்வேறுபட்ட இதழ்களிலும் வெளிவந்துள்ள அதேநேரம், வானொலி, தொலைக்காட்சிகளிலும் ஒலி/ஒளிபரப்பாகியுள்ளன. எழுதியுள்ள நாடங்கள்
இந்த நாடகங்களை சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் அரங்கேற்றின. எழுதியுள்ள நூல்கள்
பெற்ற விருதுகளும், பரிசில்களும்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia