சைன ராமாயணம்சமண இராமாயணம் அல்லது சைன இராமாயணம் சமணர்களால் இயற்றப்பட்டது. சமண சமயத்தின் தலையான காேட்பாடான காெல்லாமையின்படி வாழ்பவனாக இராமனைக் காட்டுகிறது. இராமன் எந்தக் காெலையும் புரியவில்லை எனவும், இலக்குவனே இராவணனையும், மாரீசனையும் கொல்வதாகக் கதை செல்கிறது.[1] கதைகாசியிலும், அயோத்தியிலும் இருந்துகொண்டு அரசாட்சி புரிந்துவரும் தசரதனுக்கு நான்கு பிள்ளைகள். இந்த ராமாயணத்தின்படி இராவணன் தனக்கு பிறந்த மகளான சீதையால் தனது இராச்சியத்திற்கு அழிவு நேரிடும் என சாதகர்கள் கூறியதனால் வெகு தாெலைவு காெண்டு சென்று விட்டு விடுகிறார். அதன்பின் அவளை வளர்த்த சனக மகாராசா ஏற்பாடு செய்திருந்த சுயம்வரத்திற்குச் சென்ற இராமன் சீதையை மணக்கிறான். காசியில் இருந்த இராமன் இலக்குவன், சீதை ஆகியோருடன் சென்று சித்திரக்கூடத்தில் தங்குகிறார்கள். அங்கு வந்த நாரதரை இராமன் மதிக்காததால் நாரதர் இராவணனிடம் வந்து இலக்குவன் எனும் நடத்தை கெட்டவனுடன் தங்கள் மகளிருப்பதால் அவளுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறியதால் இராவணன் மாரீசனோடு வந்து சீதையைத் தூக்கிச் செல்கிறான். அனுமனைத் தூது அனுப்புகிறான். அவனுடன் சென்ற இலக்குவன் வாலியைக் கொல்கிறான். விபீடனனின் இடைக்கலத்தை ஏற்கிறான். இராவணனையும், மாரீசனையும் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வருகிறான். கொல்லா விரதம் பூண்ட இராமன் சுவர்க்கம் புக, கொலை புரிந்த இலக்குவன் நரகம் புகுகிறான். இது சைன நெறிக்கேற்ப எழுதப்பட்ட கதை.
உரும் இடிப்பு உண்ட அருமணி நாகம் என (சிறையில் தனித்திருந்த சீதையின் நிலையைப் பாடும் பாடல் பகுதி) (ஆசிரியப்பா) கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia