சோமசுந்தர பாரதியார்
ச. சோமசுந்தர பாரதியார் (Somasundara Bharathiar, 27 சூலை 1879 – 14 திசம்பர் 1959 ; எட்டயபுரம், தமிழ்நாடு) என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர். பிறப்புசத்தியானந்த சோமசுந்தரன்[1] என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய நாயகர் (எட்டப்ப பிள்ளை) – முத்தம்மாள் இணையருக்கு மகனாக 1879 சூலை 27-ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார்.[2] சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார். பாரதி பட்டம்அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்பிரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை இயற்றுவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர். நெல்லைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வருகை தந்திருந்தார்; அவர் அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.[3] கல்விசோமசுந்தர பாரதியார் தமது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் [4] இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார். [சான்று தேவை] நெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts ) பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905-ஆம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913-ஆம் ஆண்டில் கலை முதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார்.[1] குடும்பம்சோமசுந்தர பாரதியார் 1894 (ஏறத்தாழ) ஆம் ஆண்டில் மீனாட்சி அம்மையாரை மணந்தார். இவர் வழியாகச் சோமசுந்தர பாரதியாருக்கு இராசராம் பாரதி (1898 மார்ச் 30 -?), இலக்குமிரதன் பாரதி [5] (1903 பிப்ரவரி 16 -?) என்னும் மகன்களும் இலக்குமி பாரதி (1905 அக்டோபர் 13 - ?) என்னும் மகளும் பிறந்தனர்.[1] திருவெட்டாற்றில் 1927 திசம்பர் 1-ஆம் நாள் வசுமதி அம்மையாரை சோமசுந்தர பாரதியார் தனது 48-ஆம் வயதில் மணந்தார். இவ்வம்மையாரின் வழியாக மீனாட்சி (1929 பிப்ரவரி 28 - [1] லலிதா [6] (1930 சூலை 27 - )[7] ஆகிய இரு மகள்களும் பிறந்தனர். தொழில்சோமசுந்தர பாரதியார் சிறிது காலம் எழுத்தராகவும், தட்டச்சாளராகவும் பணியாற்றினார்.[சான்று தேவை] 1905-ஆம் ஆண்டு முதல் 1920-ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் வழக்குரைஞராகத் தொழிலாற்றினார்.[1] 1920-ஆம் ஆண்டு முதல் 1933-ஆம் ஆண்டு வரை மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலாற்றினார்.[1] 1933-ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 1938-ஏப்ரல் மாதம் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[7] இந்திய விடுதலைப் போராட்டம்சோமசுந்தர பாரதியார் 1905-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, அங்கே விடுதலைப் போராட்டம் கனன்று கொண்டிருந்தது. அப்போராட்டத்தால் சோமசுந்தர பாரதியாரும் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905-ஆம் ஆண்டு முதல் 1919-ஆம் ஆண்டு வரை அவரது பெயர் அரசினரின் ஐயப்பாட்டு பட்டியலில் இடம்பெற்று இருந்தது.[1] வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சோமசுந்தர பாரதியார் “இண்டியன் நேவிகேஷன்” என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராக இருந்தார்.[8] மதுரையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநாட்டினைக் கூட்டி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1926 ஆம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.[1] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்1937-ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் தொடங்கினார். 1937 செப்டம்பர் 5-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25-ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியைக் கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியருக்குத் வெளிப்படை மடல் (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar) ஒன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.[9] 1948-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கும் மடல் எழுதினார்.[7] தமிழ்ப்பணிஇளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். தமது ஆராய்ச்சிகளைச் சொற்பொழிவின் வழியாகவும் ஆய்வுநூல்கள் எழுதுவதின் வழியாகவும் வெளியிட்டார். 1932–33-ஆம் ஆண்டுகளில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார்.[7] சொற்பொழிவுகள்சோமசுந்தர பாரதியார் 1916 ஆகத்து 16-ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் தலைப்பில் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றினார்.[1] இச்சொற்பொழிவு இதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. மதுரைத் தமிழ்ச் சங்கமும் இளம் கிறித்துவ ஆடவர் சங்கமும் (YMCA ) மதுரையில் 1926 சனவரி 26-ஆம் நாள் நடத்திய ஆய்வரங்கிலும் [1] 1929 மார்ச் 11-ஆம் நாள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் [7] திருவள்ளுவர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரைகளே பின்னர்த் திருவள்ளுவர் என்னும் நூலாக வெளியிடப்பட்டன. திராவிடர் கழகம் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என இயக்கம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்டு கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என அண்ணாதுரையுடன் வாதிட்டார். அச்சொற்பொழிவு தீப் பரவட்டும் என்னும் நூலில் இடம்பெற்று இருக்கிறது. நூல்கள்1998-ஆம் ஆண்டு இவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.[10][11] ஆய்வு நூல்கள்திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றிப் புனையப்பட்ட பொய்க்கதைகளைத் தம்முடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்த சோமசுந்தர பாரதியார் பின்வரும் நூல்களை எழுதினார்:
படைப்பிலக்கியங்கள்சோமசுந்தர பாரதியார் பல தனிச்செய்யுள்களை அவ்வப்பொழுது இயற்றி இருக்கிறார். எனினும் பின்வரும் இரண்டு படைப்புகள் மட்டுமே நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன.
உரைநூல்சோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை நூல் தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் 1942 அம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் இன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் புத்துரை எழுதினார். அவை அவருடைய காலத்தில் நூலாக உருப்பெறவில்லை.[14] பின்னர் 1997ஆம் ஆண்டில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2 : தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. சோமசுந்தரனாரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார். அரசியல் நூல்
வாழ்க்கை வரலாறு
மாநாடுகள்சொற்பொழிவுகள், நூல்கள் ஆகியவற்றின் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றியதைப் போலவே தமிழ் மாநாடுகள் சிலவற்றில் சொற்பொழிவாளராகவும் அமைப்பாளராகவும் தலைவராகவும் பொறுப்பேற்று சோமசுந்தர பாரதியார் செயற்பட்டார். அம்மாநாடுகளுள் சில பின்வருமாறு[7]:
சமூகச் சீர்திருத்தப்பணிசோமசுந்தர பாரதியார் இளமையிலேயே சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் செயற்பட்டார். அப்பணியின் உச்சமாக, 1933 மே 13-ஆம் நாள் மதுரைக்கு அருகில் உள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு எனத் தொடக்கப்பள்ளி ஒன்று நிறுவினார். அதன் தொடக்கவிழாவில் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார்.[7] வெளிநாட்டுப் பயணம்சோமசுந்தர பாரதியார் 1930, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் ஈழ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.[7] பட்டங்களும் விருதுகளும்
மறைவு1959 திசம்பர் 2-ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். திசம்பர் 4-ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசம்பர் 7-ஆம் நாள் தந்நினைவு இழந்தார். திசம்பர் 14-ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். திசம்பர் 15-ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்குப் பசுமலையில் எரியூட்டப்பட்டது.[15] சோமசுந்தர பாரதியாரைப் பற்றிய கட்டுரைகள் / நூல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia