சோழர்கால ஆட்சி
சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. உழவுக்கும் தொழிலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். வாணிகககுழுக்கள் அமைத்தல், வெளிநாட்டுக்கு தூதுக் குழுக்களை அமைத்தல் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாணிகத்தை வளர்த்தனர். நாட்டு நிர்வாகத்திலும் நீதி விசாரனையிலும் சோழர்கள் காலத்தில் பல அறிவுப்பூர்வமான மாற்றங்கள் விளைந்தன. கிராமங்களில் ஊராட்சி தழைத்தோங்க வாரியங்கள் அமைத்தனர். நீதிமுறையையும் நிலைக்கச் செய்தனர். எனினும் வரி விதிப்பில் மக்கள் தங்களை விற்றுக் கொள்ளவும் செய்தனர் நட்டையண்ட பாண்டியன்அரசன்பாஸ்கரன் சோழன்குடும்பன் சோழ நாடுகி.பி 980 முதல் 1150 வரை கிழக்கு மேற்கு தெற்கு எனக் கடலால் சூழப்பட்ட இந்தியத் தீபகற்பம் முழுவதும் சோழர்க்ளின் ஆட்சியே நிலவியது எனலாம். இவர்களின் வடக்கு எல்லை துங்கபத்திரை, கோதாவரி நதிவரை பரவியிருந்தது. இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் சோழப்பேரரசு கடல் கடந்தும் பரந்து விரிந்தது. சோழப்பேரரசின் தலைநகரங்களாக உறையூர், பழையாறை,தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகியன இருந்தன. காஞ்சிபுரம், மதுரை ஆகியவை சிறப்பு வாய்ந்த முக்கிய நகரங்களாகத் திகழ்ந்தன. ![]() ஆட்சிமுறைசோழர்களின் அரசு முடியாட்சியாகவே இருந்து வந்தபோதிலும், சங்ககாலத்துச் சோழர்களுக்கும், பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த சோழர்களின் முடியாட்சிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன. மன்னர்கள் கடவுளின் அவதரங்களாகக் கருதப்பட்டனர். இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள், அதிகாரத்திலும், ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். தலைநகரமும், பல்வேறு துணைத் தலைநகரங்களும் இருந்தன. சமயங்களில் துணைத் தலைநகரங்களிலும் அரசவை கூடியது. அரசன், உயர்நிலைத் தலைவனாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்தான். அரசுரிமைஅரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சமயங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். படைகள்கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. காலாட்படையில் சிறப்பிடம் பெற்ற படை கைக்கோளப்படை. இவர்கள் தவிர வில்லெறியும் வில்லாளிகள், வாள்படைவீரர்கள் என்போரும் இருந்தனர். 'வலங்கை', 'இடங்கை' என இரு வகைப் பிரிவினர்கள் இருந்தனர். அரசருக்கு அணுக்கத்திலே இருக்கும் 'வேளகாரர்' என்போர் இருந்தனர். முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது. உள்ளாட்சிப் பிரிவுகள்சோழப் பேரரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அவை
என்பனவாகும். சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள்மண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. மத்திய அரசுக்கும்,மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர். ஆட்சிக்கு உறுதுணையானோர் உடன்கூட்டத்து அதிகாரிகள் ஆவர். அமைச்சர்களும் இவர்களில் அடங்குவர். அரசாங்கத்திலோ படியிலோ உள்ள சிறந்தவர்கள் அதிகாரிகள் என்ற சிறப்புப் பெயர் பெறுவர். இவர்களுல் சிறுதரம், பெருந்தரம் என்ற இரு பிரிவுகள் இருந்தன. நீதிபதிகள் நியாயத்தார் எனப்பட்டனர். இவர்கள் உயர்குடிப்பிறப்பின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டனர். ஒரு கிராமம் முழுவதுமோ பகுதியாகவோ இவர்களுடைய ஊதியமாகத் தரப்பட்டது. இவற்றுக்கு சீவிதம் என்று பெயர். இறையிலி நிலங்களும் உண்டு. இந்நிலத்தில் அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. அரசனின் ஆணைகளை கோட்டத்து அவையினர் என்போர் நிறைவேற்றுவர். மேலும் நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், தேவதானத்து ஊர்களிலார், பள்ளிச்சந்தங்கள், கண்முற்றூட்டு, வெட்டிப்போறு, நகரர்கள் ஆகியோரும் நிறைவேற்றி வைப்பர். நாட்டார் சபையான நாடும் பிரம்தேயச் சபையும் ஊர்ச்சபையும் அரசாணையின் மேல் பிறப்பித்த கட்டளைகளை ஆவணத்தில் எழுதி வைத்திருப்பர். மதியஸ்தன் காரணத்தான் என்பவரே எழுதுபவர். சபைத் தலைவனுக்குத் திருவடிகள் என்ற பெயர். தானம் செய்யப்பட்ட ஊரின் எல்லைகளைக் குறித்த அரசாங்க அலுவலர் நால்வர் உண்டு. கிராம நிர்வாகம்குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவை தவிர உழுதுண்மக்கள் என்ப்படும் உழவர்கள் குழுக்களுக்கு சித்திரமேழி என்ற பெயர் இருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. சபையில் ஆட்டைவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்ச வாரியம், பொன்வாரியம் எனப்பல பிரிவுகள் இருந்தன.இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன. உறுப்பினர் தேர்வு குடவோலை முறைப்படி நிகழும். இச்சபையானது பெருங்குறி என்பபடும். வாரிய உறுப்பினர்கள் ' வரிய பெருமக்கள்' எனப்படுவர். இச்சபைகளும் வாரியங்களும் மரத்தடிகளிலேயே கூடும். ==சோழர்கால வரிகள்==. அவை;
நீதிமுறைசோழப்பேரரசில் நீதி வழங்கும் பொறுப்பு ஊர்ச்சபையினரிடமும் குலப்பெரியதனக் காரரிடமும் ஒப்படைக்கப்பட்டது. விசாரிக்கவும் தீர்ப்பு வழங்கவும் முறைகள் வகுக்கப்பட்டன. பிறர் கூறும் சான்று, நேரில் கண்டது இதைக்கொண்டு நீதின்மன்றத்தினர் தீர்ப்பு வழங்கினர். உடலைப்பற்றிய குற்றம், உடைமைகளைப் பற்றிய குற்றம் எனக் குற்றங்கள் இருவகைப்படும். சோழர்காலச் சமுதாயத்தில் சாதிநெறிகளை மீறுவோர், உயர்சாதியினரை எதிர்ப்போர் ஆகியோர் மிகுதியாகத் தண்டிக்கப்பட்டனர். உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia