ச. ராஜநாயகம்
பேராசிரியர் டாக்டர். ச. ராஜநாயகம் (பிறப்பு: 01-நவம்பர்-1959) ஊடக ஆய்வாளர், கல்லூரி பேராசிரியர், நாவலாசிரியர், கவிஞர், இறையியல் சிந்தனையாளர், மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கத்தை முன்வைத்துத் தமிழக அளவில் விரிவான களஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்[1]. இவர் "மக்கள் ஆய்வு" அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆவர். வாழ்க்கைக் குறிப்புராஜநாயகம் 1959-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி என்ற ஊரில் சலேத்பிள்ளை,சலேத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.ஆரம்பக் கல்வியை அதே ஊரில் பயின்றார். பின் தனது இளங்கலை பட்டப்படிப்பை திருச்சியிலும்,முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.[தெளிவுபடுத்துக] கல்வி -பங்களிப்புஊடகம் சார்ந்த படிப்புகளையும், பாடத்திட்டங்களையும் பல கல்லூரிகளில் தொடங்க முயற்சிப்பவர். இலயோலாக் கல்லூரி, சென்னை இணை முதல்வர் மற்றும் ஊடக ஆய்வியல் புலம் தலைவராகவும் இருந்தவர்.[2] காட்சித் தகவலியல்தமிழ்நாட்டில் முதல்முதலாக ஊடகம் சார்ந்த காட்சித் தகவலியல் இளங்கலைப் பட்டப்படிப்பு சென்னை இலயோலா கல்லூரியில் தொடங்கப்பட்டது.[சான்று தேவை] இந்த துறை தொடங்க வித்திட்டவர்களில் பேராசிரியர் ச. ராஜநாயகம் குறிப்பிடத்தக்கவர்.[சான்று தேவை] ஊடகம் சார்ந்த துறை தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் ஆரம்பிக்க முயற்சித்ததவர்.[3] ஊடகக் கலைகள்இலயோலாக் கல்லூரி, சென்னையின் அங்கமான ஊடக ஆய்வியல் புலம் (School of Media Studies) ச.ராஜநாயகத்தின் முயற்சியால், 2006-ஆம் ஆண்டில் இருந்து ஊடகக் கலைகள் துறை தொடங்கப்பட்டது[4] கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்கள் இந்த முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.[5][நம்பகமற்றது ] இலக்கியம் – பங்களிப்புபின் நவீனத்துவம்பின்னவீனத்துவ நாவல்களான காலமற்ற காலம், சில முடிவுகளும் சில தொடக்கங்களும், கடைசிபொய் மற்றும் கவிதை தொகுப்புபான ரோஜாக்கள் காய்ப்பதில்லை போன்றவற்றை எழுதியுள்ளார். பின் நவீனத்துவம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்து பல கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.[6][நம்பகமற்றது ] சிறாரியல் - பங்களிப்புச. ராஜநாயகம் சிலிர்ப்பு என்னும் சிறுகதை தொகுப்பு முழுக்க முழுக்க சிறார்களை மையமாக வைத்து எழுதியுள்ளார் சிறார் காப்பகங்கள் பற்றி தமிழ்நாடு அளவில் பல கள ஆய்வுகளை மேற்கொண்டு அவர்களுக்கு தரமான உணவு, கல்வி கிடைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருபவர்.[7]சுனாமி பாதிப்புகள் ஏற்பட்டிருந்த கால கட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து அதில் பாதிக்கப்பட்ட சிறார்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை சேகரித்து பேரலை கொண்ட பிஞ்சுகள் என்னும் தலைப்பில் ஆவணப்படமாக வெளியிட்டார். திருநங்கைகள் – பங்களிப்புதிருநங்கைகள் குறித்து மக்கள் மத்தியில் புரிதல் வேண்டும் என்பதற்காக பல கருத்தரங்குகள் மற்றும் ஆவணப்படங்கள் வாயிலாக வலியுறுத்தி வருபவர். இவரது படைப்பான அப் – பால், வர்ணா போன்றவை வேற்று பாலின மக்களின் நிலையை அப்பட்டமாக பிரிதிபலிகிறது. திருநங்கைகளுக்கான தனி நபர் மசோதாவின் சட்ட திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[8] இறையியல் – பங்களிப்புபேரா. ச. ராஜநாயகம் இறையியல் சார்ந்து தமிழ் இறையியல் தடங்கள், தமிழ் இறையியல் களங்கள் போன்ற பல நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[9][நம்பகமற்றது ] மக்கள் ஆய்வு“மக்களை ஆய்வது மக்களுக்காகவே” என்ற கொள்கையுடன் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகம் - புதுவை மற்றும் தென்னிந்திய அளவில் பண்பாடு – அரசியல், ஊடகம் – விளம்பரம் நுகர்வு, தொடர்பான ஆய்வுகளை "மக்கள் ஆய்வு" நடத்தி வருகிறது. குறிப்பாக 2001 முதல் இன்று வரை நடந்த தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை துல்லியமாக கணித்துச் சொல்லிய பெருமை உடையது.[சான்று தேவை] இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் கி.மீ க்கும் மேல் ஆய்வு பயணம் செய்த இந்த ஆய்வு குழுவினை திறம்பட வழி நடத்தி வருபவர் பேரா. ச. ராஜநாயகம். இவர் மக்கள் ஆய்வு அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆவர்.[10][11] சமூக – உளவியல் அணுகுமுறைச. ராஜநாயகம் கருத்துக் கணிப்புகளில் கண்டிப்பாக சமூக – உளவியல் அணுகுமுறை வேண்டும் என்பது இவரது நோக்கம். ஆய்வுகள் பொறுத்தவரை மக்களது கருத்துகள் மட்டுமில்லாமல் அவர்களது எண்ணப் போக்குகளின் திசைகள் மற்றும் உணர்வுகள் ஆகிய அனைத்தும் கணித்தால் மட்டுமே அந்த ஆய்வு முழுமை பெரும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.[12][நம்பகமற்றது ] ஊடக ஆய்வு - பங்களிப்புச. ராஜநாயகம் ஊடகம் சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மேலும் தனது நூல்களில் ஊடகம் சார்ந்த பல புதிய வார்த்தைகளை உருவாக்கியுள்ளார்.[13][நம்பகமற்றது ] இவர் ஊடகம் சார்ந்து பல கட்டுரைகள் (Articles)கருத்தரங்கங்கள் (Conferences) நடத்தியுள்ளார்[14] சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கல்வித் திட்டக் குழுவின் தலைவராக செயல்பட்டு வருகிறார்[15] மதுரை காமராஜ் மற்றும் அன்னை தெரசா மகளிர் போன்ற பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்பார்வையாளராகவும் செயல்ப்பட்டு வருகிறார். மேலும் இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதனை ஆய்வு செய்துள்ளார்.[16] சினிமா – அரசியல்: பங்களிப்புசுதந்திரத்திற்கு பின் அரசியலில் சினிமாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பலர் கூறிவரும் வேளையில் இவர் எழுதிய ஆங்கில புத்தகமான “Popular Cinema and Politics in South India: Reimagining MGR and Rajinikanth” அந்த கோட்பாடுகளை மீள் பார்வைக்கு உட்படுத்தும் விதமாக உள்ளது.[சான்று தேவை] இதுவரை தமிழக அரசியலில் மக்கள் வாக்களித்த விதத்தை ஆய்வுக்குட்படுத்தி, மக்கள் வாக்களிக்கும் விதம் சினிமா தாக்கத்தையும் கடந்து செல்லும் என்பதையும் ஆணித்தனமாக நிரூபிக்கிறார். இந்த புத்தகம் தமிழக அரசியல் இதுவரை கடந்து வந்த பாதையை தெளிவாக உள்ளது.[17] படைப்புகள்
குறும்படம் மற்றும் ஆவணப்படம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia