ஜஸ்வந்த் சிங்
ஜஸ்வந்த் சிங் (Jaswant Singh) (பிறப்பு: ஜனவரி 3 1938) (இறப்பு செப்டம்பர் 27, 2020)இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் டார்ஜிலிங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் மயோ கல்லூரி பழைய மாணவன் மற்றும் கதக்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் கல்வி பயின்றவர். இந்திய இராணுவத்தில் அலுவலராக 1960 களில் பணியாற்றியவர். பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன் குறைந்த கால ஆட்சி காலமான மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், அவரது அமைச்சரவையில் ஆய அமைச்சராக இந்திய நிதியமைச்சர் பொறுப்பிலும், அதன் பின் அமைந்த வாஜ்பாயின் அமைச்சரவையில் இரண்டு வருடங்களுக்குப்பின் வெளியுறவுத்துறை அமைச்சராக டிசம்பர் 5, 1998 முதல் ஜூலை 1, 2002 வரையுள்ள காலத்தில் பொறுப்பிலுருந்தார். 2002 க்கு பிறகு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பதவியிறங்கும் காலமான 2004 வரை பொறுப்பிலிருந்தார். இவருடைய சாத்வீகமான அரசியல் போக்கு அனைவரையும் கவர்ந்ததாகும். பாரதீய ஜனதா கட்சி பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள் அமைப்பு என்று வர்ணிக்கப்பட்டாலும் இவர் அவைகளிலிருந்து மாறுபட்டு சுதந்திரமான மக்களாட்சியை (ஜனநாயகத்தை) வலியுறுத்துபவராக விளங்கியதின் விளைவாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை 2001 இல் பெற்றார். மேற்கோள்கள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia