ஜானகி வெங்கட்ராமன்
ஜானகி வெங்கட்ராமன் (Janaki Venkataraman) (1921 முதல் – 13 ஆகஸ்ட் 2010 வரை) 1987 முதல் 1992 வரை இந்தியா முதல் சீமாட்டியாக இருந்தார். இவர் 25 ஜூலை 1987 முதல் ஜூலை 25 வரை ஜனாதிபதி ரா. வெங்கட்ராமன் அவர்களின் மனைவியாவார். சுயசரிதைஜானகி, கமலா மற்றும் கிருஷ்ண ஐயருக்கு மகளாக பர்மாவின் பெகுவில் பிறந்தார். அவரது தாயார் ஐந்து வயதில் இறந்தார், அவரது தந்தை மறுமணம் செய்யவில்லை, அவரது உடன்பிறந்தோருடன் வீட்டுக் கடமைகளை செய்து வந்தார்.[1] ஆர் வெங்கட்ராமன் என்பவரை 1938 இல் திருமணம் செய்துகொண்டார்.இவ்விணையருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.[2] அவர் இந்து சமயத்தின் மேல் ஆழ்ந்த பக்தியும், வைராக்கியமும் கொண்டிருந்தார் என கோபால் காந்தி கூறுகிறார்.[3] அவரது திருமணத்திற்கு பிறகு, அவரது கணவரின் அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்தது, அவர் நிறுவிய "தொழிலாளர் சட்ட இதழில்" அவருக்கு உதவ ஒரு பங்காளியாக ஆனார்.[1] ஜானகி ஒரு மனித உரிமை ஆர்வலர் ஆவார், மேலும் வங்காளதேச போரில் பெண்களுக்கு எதிரான யுத்த வன்முறையை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இவர் தலைமையில் ஒன்று கூடி எதிர்த்தது. இவர் ஒரு தீவிர பெண்ணியவாதி மற்றும் பெண்களின் தன்னம்பிக்கையை ஆதரித்தவர், அத்துடன் ஒரு மனிதாபிமானம் மிக்கவர், ஏழைகளுக்கான திட்டங்களில் பணியாற்றுகிறார். கூடுதலாக, அவர் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருந்தார், புழுக்களை அழித்து நூற்கும் பட்டு அணிய மறுத்து, அதற்கு பதிலாக அஹிம்சா பட்டு அணிந்து கொண்டார். இது கோகூனுக்கு தீங்கு விளைவிக்காது. பட்டுப்புழுக்கள் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்ட புடவைகளை உருவாக்கினார், அஹிம்சா சில்க் ("மல்பெர்ரி பட்டு" என்றும் அழைக்கப்பட்டது) தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் தொழில்முனைவோரிடம் கொண்டு சென்றார்.[4] கணவரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்படும் போது ஜானகி ஒரே ஒரு காட்சியில் சேர்க்கப்பட்டபோது, அதை அகற்றும்படி கேட்டுக்கொண்டார்.[5] அவரது கணவர் இறந்து ஓராண்டு கழித்து ஜானகி வெங்கட்ராமன் 2010 ஆகஸ்ட்13 அன்று இறந்தார். இவர் தனது மூன்று மகள்களுடன் வாழ்ந்து வந்தார். [6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia