ஜாமிஆ அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்
ஜாமிஆ அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் (جامعة الباقيات الصالحات) அல்லது பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபு கல்லூரி 1857 இல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் வேலூரில் நிறுவப்பட்ட குறிப்பிடத்தக்க இஸ்லாமிய கல்லூரி ஆகும்.[1][2] தென்னிந்தியாவில் வலுவான இஸ்லாமிய நிறுவனங்களை உருவாக்குவதில் மதரஸாக்கள்[தெளிவுபடுத்துக] பிரதான பங்கு வகிக்கிறன. இந் நிறுவனத்தின் பட்டதாரி உலமாக்கள்[தெளிவுபடுத்துக] ஆயிரக்கணக்கானோர் முன்னோடி மதாரிஸ்கள்[தெளிவுபடுத்துக] மற்றும் மகாதிப்களாக தென்னிந்தியா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளில் உள்ளனர் மவ்லானா அப்துல் ஹமீத் பகாவியின் புகழ்பெற்ற அல்-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற முப்திகள்[தெளிவுபடுத்துக] மற்றும் ஆலிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.[3] சுன்னி இஸ்லாத்தை பயிற்றுவிக்கும் இக் கல்வியகம் அஃலா ஹழ்ரத் என்று அழைக்கப்படும் ஷா அப்துல் வஹாப் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த மத்ரஸா வின் பட்டதாரிகள் பாகவி (பாக்கவி) என அறியப்படுகின்றனர். இந்த மதரஸா நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கியுள்ளது.[4][5] குறிபப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia