ஜாலவர் சமஸ்தானம்
ஜாலவர் இராச்சியம் அல்லது ஜாலவர் சமஸ்தானம் (Jhalawar State) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, இராஜபுதனம் முகமையின் கீழிருந்த 24 சுதேச சமஸ்தானகளில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரமாக ஜலவர் நகரம் இருந்தது. இது தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பழைய ஜாலாவார் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது. 1838-ஆம் ஆண்டு வரை முடியாட்சியாக இருந்த ஜாலவர் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1798 முதல் 1805 முடிய செயல்படுத்திய இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஜாலவர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சுதேச சமஸ்தானமானது[2][3][4] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று ஜாலவர் சமஸ்தானம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[5] இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia