ஜூலியோ குளாடிய மரபு
ஜூலியோ குளாடிய மரபு (Julio-Claudian dynasty) அல்லது ஜூலியோ குளோடிய வம்சம் என்பது உரோமப் பேரரசின் முதல் ஐந்து பேரரசர்களை அல்லது அவர்களது குடும்பத்தைக் குறிக்கிறது. அவர்கள் - அகஸ்ட்டஸ், டைபீரியஸ், கலிகூலா, குளோடியசு மற்றும் நீரோ. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமைப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து கி.பி.68 வரை அவர்கள் ஆட்சி புரிந்தனர். இந்த மரபைத் தோற்றுவித்தவர் முதல் உரோமைப் பேரரசரான அகஸ்ட்டஸ். இறுதிப் பேரரசர் நீரோவின் தற்கொலையுடன் இந்த மரபின் ஆட்சி முடிவுக்கு வந்தது.[1] ஜூலியோ குளாடிய மரபைச் சேர்ந்த எந்த பேரரசருக்குப் பின்னரும் அவரது மகன் பேரரசராக வில்லை. பண்டைய உரோம வரலாற்றாளர்களான டேசிட்டசும் சியூட்டேனியசும், ஜூலியோ குளாடியப் பேரரசர்களை நல்லவிதமாகக் குறிப்பிடவில்லை. உரோம செனேட் அவை மேட்டுக்குடியினரின் கோணத்திலேயே அவர்கள் இருவரும் பேரரசர்களை சித்தரிக்கின்றனர். உரோமக் குடியரசை முடிவுக்கு கொண்டு வந்து, உரோமப் பேரரசை உருவாக்கி வளர்த்தது இம்மரபு தான் என்பதாலும், பேரரசர்களின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தங்கள் வரலாற்று நூல்களுக்குப் பரபரப்பு சேர்க்கும் என்பதாலும் இவ்வாறான சித்தரிப்பைச் செய்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, டேசிட்டசின் பின்வரும் பத்தியினைக் கொள்ளலாம்:
மரபின் காலக்கோடு![]() மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia