ஜெயந்த் குமார் ராய்
ஜெயந்த் குமார் ராய் (Jayanta Kumar Roy; பிறப்பு 3 பிப்ரவரி 1968) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மக்களவைத் தொகுதியிலிருந்து 2019 இந்திய பொதுத் தேர்தல் மற்றும் 2024 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1][2][3] தனிப்பட்ட வாழ்க்கைராய் 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள லதாகுரியில் கேமேந்திர நாராயண் ராய் மற்றும் ஜெயா ராய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ராய் வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையில் மற்றும் முதுநிலை மருத்துவம் பட்டம் பெற்றுள்ளார். இவர் 22 சனவரி 1992 அன்று தேப்ஜானி ராயை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia