டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் (Tata Institute of Fundamental Research) இந்தியாவின் மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் அமைந்துள்ளது இங்கு அடிப்படை கணிதம் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது. இந்த ஆராய்ச்சி கழகம் மும்பையின் கொலாபா மற்றும் ஐதராபாத்தின் நரசிங் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக இவை கருதப்படுகிறது.[1] மேலும் இங்கு பிரதானமாக இயல் அறிவியல், கணிதம், உயிரியல் அறிவியல் மற்றும் கோட்பாட்டியல் கணினி அறிவியலிலும் ஆய்வு நடத்துகிறது.[2] வரலாறு1944ஆம் ஆண்டில் ஓமி யெகாங்கிர் பாபா இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர், இவர் அறிவியல் ஆராய்ச்சி கழகம் அமைக்க நிதி உதவி கோரி சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளைக்கு கடிதம் எழுதினார்.[3] அப்போதைய டாடா குழுமத்தின் தலைவராக ஜெ. ர. தா. டாட்டா ஆதரவுடன் 1 ஜூன் 1945இல் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் நிறுவப்பட்டது, மற்றும் ஓமி யெகாங்கிர் பாபா அதன் முதல் இயக்குனாரக நியமிக்கப்பட்டார்.[4] தற்போது மும்பையில் செயல்படும் இக்கழகம் தொடக்கதில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக வளாகத்தில் செயல்பட்டது. கொலபாவில் உள்ள இக்கழகத்தின் புதிய வளாகம் சிகாகோ நகரை சார்ந்த கட்டிடக் கலைஞர் ஹெல்முட் பார்ட்ஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது மேலும் 1962 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[5] பிரபல முன்னாள் மாணவர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia