தம்பையா ஏகாம்பரம்
தம்பையா ஏகாம்பரம் (Thambiah Ehambaram, 12 அக்டோபர் 1913.[1] – 22 மார்ச் 1961) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை நகரசபைத் தலைவரும் ஆவார்.[2] திருகோணமலை நகரசபையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராகப் பணியாற்றிய ஏகாம்பரம் பல ஆண்டுகள் நகரசபைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் இரட்டை-உறுப்பினர் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[3] சூலை 1960 தேர்தலில் இவர் மீண்டும் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] இவர் பதவியில் இருக்கும் போதே 1961 மார்ச் 22 இல் காலமானார்.[5] தேர்தல் வரலாறு
மறைவு1961 மார்ச் 22 அன்று திருகோணமலை கச்சேரி வாயிலில் நடைபெற்ற சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ஏகாம்பரம் அவரது வீட்டிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுத் தனது 47-வது அகவையில் காலமானார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia