இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காகமேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.
இக்கட்டுரை ஒற்றை மூலத்தை மட்டும் சான்றுகளுக்கு சார்ந்துள்ளது. . Relevant discussion may be found on the talk page. நம்பத்தகுந்த சான்றுகளை பிற மூலங்களில் இருந்து கொடுப்பதன் மூலம் இக்கட்டுரை அழிக்கப்படாமல் தடுக்கலாம்.(செப்டம்பர் 2021)
தாமரைக்கண்ணன் (Thamarai Kannan) என அறியப்படும் வீ. இராசமாணிக்கம் (சூலை 2, 1934 - சனவரி 19, 2011) ஒரு தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நூல் மதிப்புரையாளர், பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரும் ஆவார்[1].இவர் எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறுபாக்கத்தார், அகரத்தான் போன்ற புனைப் பெயர்களிலும் எழுதி வந்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆட்சிப்பாக்கம் எனும் சிற்றூரில் வீராச்சாமி மற்றும் பாஞ்சாலி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தாமரைக்கண்ணன் உயர்நிலைப்பள்ளிக்கல்வியை சென்னையிலும் ஆசிரியர் பயிற்சிக்கல்வியைத் திருவள்ளூரிலும் பயின்றார். 1980 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1983 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார்., 1984 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (தமிழ்) தேர்வும், 1990 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெற்றார். மேலும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
எழுத்துப்பணி
சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கல்வெட்டு ஆய்வு, குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 52 நூல்கள் எழுதியுள்ளார்.[2]
நூல் பட்டியல்
இவர் எழுதிய நூல்களில் சில
புதினங்கள்
வ.எண்
நூலின்பெயர்
வெளியான ஆண்டு
பதிப்பகம்
குறிப்புகள்
1
தங்கத்தாமரை
ஆகஸ்டு 1962
வள்ளுவர் பண்ணை
2
மூன்றாவதுதுருவம்
நவம்பர் 1970
ஸ்டார் பிரசுரம்
3
நெஞ்சின் ஆழம்
மார்ச் 1979
மருதமலையான்
4
அவள்காத்திருக்கிறாள்
டிசம்பர் 1982
பூவழகிப் பதிப்பகம்
கன்னடமொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டது
5
பன்னீர்சிந்தும்பனிமலர்
அக்டோபர் 1983
நறுமலர்ப் பதிப்பகம்
6
நெஞ்சத்தில் நீ
டிசம்பர் 1987
பராசக்திபதிப்பகம்
சிறுகதைத் தொகுதிகள்
வ.எண்
நூலின்பெயர்
வெளியான ஆண்டு
பதிப்பகம்
குறிப்புகள்
1
மனக்காற்றாடி
நவம்பர் 1964
அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்
2
கொன்றைப்பூ
ஜூன் 1972
பாப்பா பதிப்பகம்
'அத்திப்பூ' என்னும் நாடகம் 11 - ஆம் வகுப்பு துணைப்பாடநூலில் இடம் பெற்றது (1978)
3
அறுசுவை
ஆகஸ்டு 1979
சேகர் பதிப்பகம்
4
ஏழுநாள்
ஆகஸ்டு 1978
சேகர் பதிப்பகம்
5
எல்லாம்இன்பமயம்
டிசம்பர் 1984
பராசக்திபதிப்பகம்
6
உயர்ந்தஉள்ளம்
டிசம்பர் 1984
பராசக்திபதிப்பகம்
7
கனவுக்கண்கள்
டிசம்பர் 1985
பராசக்திபதிப்பகம்
8
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்
டிசம்பர் 1985
பராசக்திபதிப்பகம்
நாடகங்கள்
வ.எண்
நூலின்பெயர்
வெளியான ஆண்டு
பதிப்பகம்
குறிப்புகள்
1
கிள்ளிவளவன்
1960
அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்
‘கொடைவள்ளல் குமணன்’ என்னும் நாடகம் 12 - ஆம் வகுப்பு சிறப்புத் தமிழில் இடம் பெற்றது
13/11/1977 - நடுகல் கண்ட கீழ்ச்சேரிக் கோழி. 'தினமணி சுடர்’
03/09/1978 - மதுராந்தகம் வட்டம் ஈசூரில் சோழர்காலப் பஞ்சலோகப்படிமங்கள் (வீணாதர்... பார்வதி) கண்டறிந்து தொல்பொருள்துறைக்குச் செய்தி தந்தது. ‘தினமணி சுடர்’
-/-/1978 - மதுராந்தகம் வட்டம், இடைகழிநாடு, கருவம்பாக்கத்தில் வீரகேரளன் காசுகண்டு தொல்பொருள்துறைக்கு அளித்தது.
02/03/1979 - வள்ளுவர் காலத்தில் எழுதிய தமிழ் மற்றும் திருக்குறள். ‘தினமணி கதிர்’
08/05/1989 - கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு. ‘தினமணி’
31/05/1989 - 3000 ஆண்டுகளுக்கு முந்திய குகை சித்திரங்கள் கண்டுபிடிப்பு. ‘தேவி’
19/01/1990 - மதுராந்தகம் வட்டம், கடைமலைப்புத்தூரில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய 1.5 மீட்டர் உயரமுள்ள இயக்கி, சாத்தனார் சிலைகள். மின்னல்சித்தாமூரில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால சாத்தனார், கொற்றவை சிலைகள் கண்டறிந்தது. ‘தினமணி’
05/07/1997 - 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அய்யனார் சிலை. ‘தினமணி’
26/08/1997 - பொலம்பாக்கத்தில் புதிய கல்வெட்டுகள். ‘தினமலர்’
02/09/1997 - காசி பயண கோட்டுருவச் சிற்பம். ‘தினமணி’
20.04.1998 - செய்யாறு வட்டம், கூழம்பந்தல் 1500 ஆண்டுகளுக்கு முன்னதான ஒரு மீட்டர் உயரத்திற்கும் மேலுள்ள சமணதீர்த்தங்கரர் சிலை.
31/03/1999 - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் பெரணமல்லூரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அய்யனார், கொற்றவைசிலைகள். ‘தினமலர்’
14/05/1999 - மதுராந்தகம் வட்டம், கொங்கரைகளத்தூரில் அரிய செய்திகளைக் கொண்ட இரண்டு பல்லவர்காலக் கல்வெட்டுகள். ‘தினமலர்’
03/04/2000 - காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் ஈசூரில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால திருமால் சிற்பம். நெற்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சமணதீர்த்தங்கரர், வெண்மாலகரத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்திய திருமால், சீதேவி, பூதேவிசிலைகள் (சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தியவை). ‘தினமலர்’
-/-/2001 - கொங்கரையில் இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டு.
24/01/2001 - 300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் மதுராந்தகம் வட்டத்தில் கண்டுபிடிப்பு. ‘தினமலர்’
12/08/2001 - காஞ்சிபுரம் அருகே சிறுதாமூரில் சோழர் கால கல்வெட்டு சிற்பம். ‘தினமலர்’
09/11/2002 - ஆலந்தூரில் மண்ணுக்கடியில் இன்னொரு கோயில்கண்டுபிடிப்பு. ‘தினமலர்’