தாமிரபரணி இராச்சியம்
தாமிரபரணி இராச்சியம் அல்லது தம்பபன்னி இராச்சியம் என்பது இலங்கையினதும் இராசரட்டை இராச்சியத்தினதும் பண்டைய நிருவாக மையம் ஆகும். அது பொ.கா.மு. 543 இல் தற்கால இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றத்துடன் ஆரம்பமாகி பொ.கா.மு. 505 வரை நிலவியது. தாமிரபரணியில் பண்டைய இந்தியாவிலிருந்து தன் பெற்றோரால் துரத்தியடிக்கப்பட்ட ஓர் இளவரசனான விஜயன் மட்டுமே அரசனாக இருந்தான். பெயர்தம்பபன்னி எனும் பெயர் தாம்ரபரணி அல்லது தாம்ரவர்ணி எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும்.[1] இது விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கிய இடத்தில் அவர்கள் தொட்ட மண் செப்பு நிறத்தில் அல்லது வெண்கல நிறத்தில், அஃதாவது தாமிர நிறத்தில் காணப்பட்டதனாலாகும். இதனைத் தழுவியே தாமிரபரணி எனப் பெயரிடப்பட்டது. [2] இப்பெயரே கிரேக்க மொழியில் தப்ரபேன் என்றும் பாளி மொழியில் தம்பபன்னி என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia