திக்பாலர்கள்![]() திக்பாலகர்கள்(दिक्पाल) திசைகளை காப்பவர்கள் ஆவார். வடமொழியில் திக்(दिक्) என்றால் திசை என்று பொருள், பாலகர்(पाल) என்றால் காப்பவர்கள் என்று பொருள். எனவே திசைகளை காப்பவர்கள் திக்பாலகர்கள் என அழைக்கப்பட்டனர். எட்டுதிக்குகளை காப்பவர்களை மொத்தமாக அஷ்டதிக்பாலகர்கள் என அழைப்பர். எட்டுதிக்குகளுடன் ஊர்த்துவம்(மேல்) மற்றும் அதம்(கீழ்) திக்குகளை காப்பவர்களையும் சேர்த்து தசதிக்பாலகர்கள் எனவும் அழைப்பதுண்டு. இந்து மதத்தில், திக்பாலகர்களின உருவங்களை கோவில் கோபுரங்கள், வாயில்கள், கூரைகள் மற்றும் சுவர்களில் காணலாம். தசதிக்பாலர்கள்தசதிக்பாலர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
திசைகளின் பெயர்கள்இந்து சாஸ்திரங்களில் திசைகளின் பெயரை அந்தந்த திசைகளின் அதிபதிகளை வைத்து கூறுவதுண்டு. அதாவது வடகிழக்கு திசையினை ஈசானியம் என்றும் தென்கிழக்கு திசையினை அக்னேயம் என்று திசைக்குறிய திகபாலர்களின் பெயர்களை வைத்து அழைப்பதுண்டு. இந்த முறை வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமாக காணப்படுகிறது. லோகபாலர்கள்இந்து மதத்தில் நான்கு பெரும் திசையை காப்பவர்கள் லோகபாலர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த லோகபாலர்களின் சிலைகளை கோபுரவாசல்களின் வைப்பது வழக்கம் இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia