திருக்குற்றால மாலை

திருக்குற்றால மாலை என்பது திரிகூடராசப்பரின் பதினான்கு படைப்புகளில் ஒன்றாகும்.

காப்பு

பூமண்ட லம்பரவும் புங்கவர்குற் றாலலிங்கர்
நாமஞ்சேர் பாமாலை நாட்டவே - தாமஞ்சேர்
தந்தமதத் தந்திமுகத் தந்தைதுணைச் செந்தினகர்க்
கந்தனிணைச் செஞ்சரணங் காப்பு.

என்று காப்பினை கொண்டு தொடங்கும் இந்நூல் திருக்குற்றாலநாதரை பாராட்டி பாட அவரின் இரு பிள்ளைகளான கணபதியையும், முருகனையும் பாடியிருக்கிறார்.

நூலின் அமைப்பு

இதில் 100 செய்யுள்கள் கலித்துறையால் இயற்றப் பெற்றுள்ளன. நெடிலடி அடியளவில் புனையப்பட்டு நான்கடிகளில் எதுகைத்தொடை கொண்டுள்ள எல்லா பாடல்களும் "குற்றாலத் துறைபவனே" என்று முடிகின்றன.

மூலம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya