திருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோயில்

திருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவையாறு-கும்பகோணம் சாலையில கிழக்கே 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள மூலவர் ஜெகத்ரட்சகப் பெருமாள் என்றும் வையங்காத்த பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் பூமிதேவி, நீலாதேவியுடன் நான்கு கரங்களோடு நின்ற நிலையில் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். வலது கரத்தில் செங்கோல் ஏந்திய நிலையில் உள்ளதால் உய்யவந்தான் என்றும் அழைக்கின்றனர்.[1]

சிறப்பு

தேவர்கள் நந்தக முனிவருடன் வந்து பெருமாளை வணங்கியதால் இக்கோயில் திருக்கூடலூர் என்றழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya