திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
புவியியல் ஆள்கூற்று:8°35′48″N 77°57′28″E / 8.596785°N 77.957740°E / 8.596785; 77.957740
பெயர்
பெயர்:திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கோளூர்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வைத்தமாநிதிபெருமாள்
தாயார்:குமுதவல்லி, கோளுர் வள்ளி
தீர்த்தம்:குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி)
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:ஸ்ரீகர விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் எட்டாவது திருப்பதியுமாகும்.

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

  • இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான்.
  • இறைவி: குமுதவல்லி, கோளுர் வள்ளி.
  • தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி).
  • விமானம்: ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.

நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார்.[1]

தலவரலாறு

பார்வதியின் சாபத்தால் குபேரனிடமிருந்து நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலகின. அவை திருமாலிடம் சென்று சரணடைந்தன. இதனால் திருமால் வைத்தமாநிதி என்று அழைக்கப்படுகிறார். பின்பு குபேரன் திருமாலை இத்தலத்தில் வழிபட்டு நவநிதிகளைப் பெற்றுக்கொண்டார்.

விழாக்கள்

கோயிலின் உட்பகுதியில் உள்ள ஒரு கூடம்
ஆவணி திருவிழாவில் பெருமாள் ஒவ்வொரு நாளும் வரும் வாகனங்கள்

ஆவணித் திருவிழா

இக்கோவிலில் ஆண்டுதோறும் 10 நாள் திருவிழா தமிழ் மாதமான ஆவணியில் (ஆங்கிலம் : ஆகஸ்ட்-செப்டம்பர்) நடைபெறுகிறது. பத்து நாட்களும் தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் மாட வீதிகளில் வலம் வருவார். ஐந்தாம் நாளில், மதுரகவி ஆழ்வாரும் பல்லக்கில் (அன்ன வாகனம்) ஊர் சுற்றி அழைத்துச் செல்லப்படுகிறார். 9ம் நாள், ஆழ்வார் திருநகரியில் இருந்து நம்மாழ்வார் திருக்கோளூர் வந்து, பெருமாள், மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோரின் பல்லக்குகள் கோயிலை வலம் வருகின்றன.திருவிழாவின் 10-ம் நாள் தேரோட்டம் நடைபெறும். பெருமாள் திருத்தேரில் ரத வீதிகளில் வளம் வருவார்.

வைகுண்ட ஏகாதசி

பகல் பத்து (10 பகல்கள் ) மற்றும் இராப் பத்து (10 இரவுகள் ) திருவிழா மார்கழி மாதத்தில் (டிசம்பர்-ஜனவரி) இருபது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் பத்து நாட்கள் பகல்-பத்து (10 நாள் பகல் திருவிழா) என்றும், இரண்டாவது பாதி ரா பாத்து (10 நாள் இரவு நேர திருவிழா) என்றும் குறிப்பிடப்படுகிறது. ரா பத்து முதல் நாள், வைகுண்ட ஏகாதசி ஆகும் . வைகுண்ட ஏகாதசி பெருமாளை வழிபட உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாத கருடசேவை

புரட்டாசி கருடசேவை

தமிழ் மாதமான புரட்டாசியின் (செப்டம்பர்/அக்டோபர்) சனிக்கிழமைகளில், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் மதுர கவி ஆழ்வாரும் மாலையில் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.

நம்மாழ்வார் கருட சேவை

ஆழ்வார் திருநகரியில் (மே-ஜூன்) வைசாகி திருவிழாவின் ஐந்தாம் நாள் விழாவின் போது, ​​அப்பகுதியில் உள்ள நவ திருப்பதி சன்னதிகளில் உள்ள உற்சவ மூர்த்திகள், ஆழ்வார் திருநகரி கோவிலுக்கு விஷ்ணுவின் புனித வாகனமான கருட வாகனத்தில் கொண்டு வரப்படும். நம்மாழ்வார் சிலை,அன்ன வாகனத்தில் (பல்லக்கு) இங்கு கொண்டு வரப்பட்டு, இந்த ஒன்பது கோயில்களில் ஒவ்வொன்றிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட அவரது பாசுரங்கள் (பத்திகள்) வாசிக்கப்படுகின்றன. இந்த கருடசேவை திருவிழாவுக்காக, ஆழ்வார் திருநகரிக்கு ​​வைத்தமாநிதி பெருமாள் மற்றும் மதுர கவி ஆழ்வார் சிலைகளும் எடுத்துச் செல்லப்படுகின்றன .

மேற்கோள்கள்

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya