திருச்சுனை அகத்தீசுவரர் கோயில்
திருச்சுனை அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் திருச்சுனை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2][3] அகத்தியர் இக்குன்றிற்கு விசயம் செய்த போது, சிவனை வழிபட நினைத்து, அருகிலுள்ள பாறையில் சுனைநீரைத் தெளித்த போது, அப்பாறைப் பகுதி நெகிழ்வானது. அந்த நெகிழ்ந்த பகுதியை சிவலிங்கமாக வடிவமைத்து, அகத்தியர் வழிபட்டார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 226 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருச்சுனை அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°10′05″N 78°21′06″E / 10.1680°N 78.3517°E ஆகும். இக்கோயிலில் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் தாயார் பாடகவள்ளி ஆவர். அகத்தீசுவரர், பாடகவள்ளி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், லிங்கோத்பவர், சண்டிகேசுவரர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர், அகத்தியர், உஷாதேவி சமேத சூரியன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia