திருநிழல்மாலை
திருநிழல்மாலை (Thirunizhalmala) ("புனித நிழலின் மாலை" அல்லது "அருள்" [1]) என்பது சுமார் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மலையாள மொழியில் எழுதப்பட்ட "பாட்டு" வகைக் கவிதையாகும்.[2][3] "இராமசரிதம்" என்ற காப்பியத்துடன், இதுவும் மலையாளத்தில் உள்ள ஆரம்பகால கவிதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[2] இது பொதுவாக தென்னிந்தியாவில் வைணவ பக்தி இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு படைப்பாகவும் கருதப்படுகிறது.[4] இது சில நேரங்களில் "மலையாளத்தின் முதல் மதப் படைப்பு" என்று அழைக்கப்படுகிறது.[1] இதை ஆறன்முளாவின் புறஞ்சேரியானன்அயிரூரில் வாழ்ந்த கோவிந்தன் என்பவர் எழுதினார். இது கி.பி 1200 - 1300 ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டிருக்கலாம் என முனைவர் எம். எம் புருசோத்தமன் நாயர் கூறுகிறார். திருநிழல்மாலை என்பது மலையாள இலக்கியங்களில் ஒன்று. ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் இறைவனைப் பற்றியது. ப்ராமசரிதத்தைப் போன்றே எழுதப்பட்டுள்ளது. மலையாளத்தில் அல்லாமல், தமிழினை ஒத்த மொழியில் எழுதப்பட்டது. தோற்றம்இதை ஆறன்முளாவின் புறஞ்சேரியான அயிரூரில் வாழ்ந்த கோவிந்தன் என்பவர் எழுதினார். இது கி.பி 1200 - 1300 ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டிருக்கலாம் என முனைவர் எம். எம் புருஷோத்தமன் நாயர் கூறுகிறார்.[5][1] "திருநிழல்மாலை", பெரும்பாலும் ஒரு உயர் சாதிக் கவிஞரால் (ஒருசில "குருமூர் பள்ளி"யிலிருந்து) உள்ளூர் அளவீடுகளிலும், திராவிட எழுத்துப்பிழையுடனும் இயற்றப்பட்டுள்ளது.[6][7] இந்தப் படைப்பு புகழ்பெற்ற "இராமசரிதம்" என்ற நூலுக்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது என்று கருதப்படுகிறது.[8] இந்தக் கவிதையின் கையெழுத்துப் பிரதி வடக்குக் கேரளாவிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.[4] பத்தனம்திட்டாவில் உள்ள ஆறன்முளா பார்த்தசாரதி கோயிலின் சடங்கு வாழ்க்கையைப் பற்றிய விளக்கமே இந்தக் கவிதையின் மையக் கருப்பொருள்.[9] விவரிக்கப்பட்டுள்ள முக்கிய சடங்குகள் மலையர்/மலையராயன் அல்லது மலையன் சமூகத்தின் பண்டைய சடங்குகள் (கடவுள்களின் பல்வேறு அசுத்தங்களை அகற்றுவதற்காக நிகழ்த்தப்படுகின்றன) ஆகும்.[8][4] இது கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், கோயில்-கிராமங்களின் உரிமையாளர்களின் குடும்பங்கள் மற்றும் பாதுகாக்கும் படைவீரர்களையும் விவரிக்கிறது.[4] "திருநிழல்மாலை" வட கேரள கலை வடிவமான தெய்யம் மற்றும் அந்தக் கலைஞர்களின் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[10] இந்தக் கவிதையில் மலையாளத்தில் பரசுராமர் கேரளாவை "நிறுவிய" புராணக்கதை மற்றும் பிராமணர்களின் அறுபத்து நான்கு குடியிருப்புகள் பற்றிய ஆரம்பகால நிகழ்வு உள்ளது.[6] இது இடைக்காலத் தமிழ்க் கவிஞர் கம்பரையும் குறிப்பிடுகிறது.[6] உள்ளடக்கம்ஆறன்முளாவின் இறைவனின் நிழல் குறித்து விளக்குகிறது இந்த நூல். முதலாம் பாகத்தில் தேவதாசின் துதிகளும், பாரதகண்டம், கேரளோல்பத்தி, சேரராஜ்யம், அறுபத்திநான்கு ஊர்கள், ஆறன்முளை கிராமம் ஆகியனவும், இரண்டாம் பாகத்தில் தூவலுழியல், நாகூர் ஆகியனவும் அடங்கும். மலையர் அல்லது மலையரையர் என்போர் பற்றி மூன்றாம் பாகத்திலுள்ளது. தேவர்கள் வரலாறு, குறத்தி நிருத்தம், நிழலேற்றல் ஆகியனவும் மூன்றாம் பாகத்தில் உள்ளன. உள்ளடக்கத்திலும், மொழி நடையிலும் திராவிட சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இதன் சிறப்பு. எடுத்துக்காட்டு பாடல்
மொழியளவில் திராவிடச் சொற்களும், சமசுகிருதச் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், திராவிட சொற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. விருத்த நடையில் உள்ள பாகங்கள் தமிழினோடும் அக்கால மொழிநடையினோடும் ஒத்திருக்கிறது. மலையாள எழுத்தில் எழுதப்பட்டுள்ள இதன் பிரதி, கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளூரிலுள்ள சாமக்கான் தேவஸ்வத்தில் உள்ளது. எம். எம்.புருசோத்தமன் நாயர் (1981 & 2016) மற்றும் ஆர்.சி.கரிப்பத் (2006)[10] ஆகியோரின் நவீனப் பதிப்புகள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia