திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1] இறைவன், இறைவிஇச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், தாயார் தங்காதலி. பசு மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வெட்டிப்பார்த்தபோது சிவலிங்கம் வெளிப்பட்டதாக தலவரலாறு.[2] தல வரலாறுஇத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார். இத்தலத்து சிவபெருமானுக்கு எண்ணெய்க்காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை[2] கரிகாற் சோழன்சமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம். இக்கோயிலை அமைக்க கரிகாலன் விரும்ப, அவன் மீது குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாற் சோழ மன்னன் மீது ஏவ சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது.[2] அமைவிடம்இச்சிவாலயம் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாசூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருவள்ளூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[2] இவற்றையும் பார்க்கஆதாரங்களும் மேற்கோள்களும்வெளி இணைப்புகள்
படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia