திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருமழிசை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°03′08″N 80°03′41″E / 13.0523°N 80.0615°E ஆகும். இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4] இக்கோயிலில் திருமங்கைவல்லி தாயார் சன்னதி, பக்திசாரர் என்கிற திருமழிசை ஆழ்வார் சன்னதி, ஆண்டாள் சன்னதி மற்றும் இராமானுசர் சன்னதி ஆகியவையும் உள்ளன. வைகாநச ஆகம முறைப்படி பூசைகள் நடக்கும் இக்கோயிலின் தலவிருட்சம் பாரிஜாதம் மற்றும் தீர்த்தம் பிருகு புஷ்கரணி ஆகும்.[5] 2022ஆம் ஆண்டு சூலை மாதம் ஏழாம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலின் ஆனி பிரம்மோத்சவத் திருவிழாவின் தேரோட்டம் சூலை 14ஆம் நாள் நடைபெற்றது. மொத்தம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது.[6] 2023ஆம் ஆண்டு சூன் மாதம் 27ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி பிரம்மோத்சவத் திருவிழாவின் தேரோட்டம் சூலை மாதம் மூன்றாம் நாள் நடைபெற்றது.[7][8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia