திருவாமாத்தூர்
திருவாமாத்தூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் திருவாமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4] விழுப்புரத்திலிருந்து சுமார் ஏழு கி. மீ. தூரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது.[5] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 64.22 மீ. உயரத்தில், (11°58′04″N 79°28′01″E / 11.9678°N 79.4669°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருவாமாத்தூர் அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருவாமாத்தூர் ஊரின் மொத்த மக்கள்தொகை 4,837 பேர் ஆகும். இதில் 2,421 பேர் ஆண்கள் மற்றும் 2,416 பேர் பெண்கள் ஆவர்.[6] சமயம்இந்துக் கோயில்அபிராமேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று திருவாமாத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[7] அரசியல்திருவாமாத்தூர் பகுதியானது, விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, விழுப்புரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia