திருவாரூர் கைலாச நாதர் கோயில்

கைலாசநாதர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:திருவாரூர்
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:மாணிக்கவல்லி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

திருவாரூர் கைலாச நாதர் கோயில் என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக கைலாச நாதர் உள்ளார். இங்குள்ள இறைவி மாணிக்கவல்லி ஆவார். கைலாசம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வணங்கினால் சிறப்பு என்று கருதுகின்றனர்.[1]

அமைப்பு

இக்கோயில் இரண்டு நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தியாகராஜர் கோயிலை நோக்கிய நிலையில் காணப்படுகிறது.சிவனுக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் காணப்படுகின்றனர். சண்டிகேசுவரர் சன்னதி இக்கோயிலில் உள்ளது.[1]

திருவிழாக்கள்

மாசி மகம், பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya