தில்லானா (தொலைக்காட்சித் தொடர்)
தில்லானா இது ஒரு சிங்கப்பூர் நாட்டு நடனம் சார்ந்த தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை 'ஜெயா ராதாகிருஷ்ணன்' என்பவர் இயக்க ஈஸ்வரி குணசேகர், அரவிந்த், ஜபு டீன், ராகதீபன், கல்பனா சிவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த தொடர் 4 நவம்பர் 2019 முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஜனவரி 2, 2020 இல் 32 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1] இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு ரோமியோ அண்ட் ஜூலியட் என்ற தொடர் ஒளிபரப்பகின்றது. கதை சுருக்கம்கீதாஞ்சலி என்ற பெண் நடனம் மீது ஆர்வவும் காதலும் கொண்டவள். ஒரு நாள் வெவ்வேறு குடும்ப சூழ்நிலையை கொண்ட ஐந்து பெண்களை சந்திக்கும் கீதாஞ்சலி அவர்களுக்கு நடனம் கற்பிக்க முடிவெடுக்கிறார். ஆனால் அவளின் குழுவை தடுக்க நினைக்கும் சக்தி. அவன் ஒரு நடனக்குழுவின் தலைவன். பல தடைகளை தாண்டி அவர்களை எப்படி ஜெயிக்க வைத்தாள் இந்த கீதாஞ்சலி என்பது தான் கதை. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia