தில்லையில் மலர்கள் (பெரிய புராணம்)தில்லை என்பது இக்காலச் சிதம்பரம். தில்லை என்பதே ஒருவகை மலர். இது மிகுயாக இருந்த ஊர் ஆதலால் இந்த ஊருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. பெரிய புராணம் இந்த ஊரிலும் அங்கிருந்த நந்தவனத்திலும் பூத்திருந்ததாக இரண்டு பாடல்களில் தெரிவிக்கிறது.[1] [2] அந்தப் பூக்களை அகர வரிசைப்படுத்திக் காணும்போது இவ்வாறு அமைகிறது. ஆரம் இலவங்கம் கற்பு கன்னிகாரம் குரவம் கூவிளம் கொன்றை சண்பகம் சரளம் சாதி சூத வகுளம் செருந்தி நந்திகரம் நரந்தம் நாகம் நாளிகேரம் பலாசு பாடலம் புன்னை பூக ஞாழல் மந்தாரம் மரு மாலதி மேகசாலம் மௌவல் வஞ்சி வழை வன்னி வாழை வீரம் மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia