தி. ஜ. ரங்கநாதன்
தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.[1] வாழ்க்கைக் குறிப்புஇவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி பெற்று சிலகாலம் கர்ணமாக வேலை பார்த்தார். திண்ணைப் பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா, மளிகைக்கடைச் சிற்றாள் என பல வேலைகள் பார்த்தார். அவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுந்தரவல்லி. 1916 இல் அவர் படித்த ’ஐரோப்பிய சரித்திரம்’ என்ற தமிழ் நூலின் ஐந்து பாகங்களும் தான் தனக்குத் தலைமை ஆசான் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய முதல் கட்டுரை ஆனந்தபோதினி இதழிலும் கவிதை ஸ்வராஜ்யா இதழிலும் 1916 ஆம் ஆண்டில் வெளிவந்தன. ’சமரபோதினி’ இதழில் துணையாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, ஊழியன், சுதந்திரச் சங்கு, ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா ஆகிய இதழ்களில் பணியாற்றினார். ‘மஞ்சரி’ இதழ் ஆரம்பித்ததிலிருந்து அதன் ஆசிரியராக இருந்தவர். அது ஆரம்பிக்கும்போது பிறந்த தன் மகளுக்கு ‘மஞ்சரி’ என்றே பெயர் வைத்தார். ‘பாப்பா’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். படைப்புகள்(பட்டியல் முழுமையானதல்ல) சிறுகதைத் தொகுப்புகள்
கட்டுரைத்தொகுதி
மொழிபெயர்ப்புகள்
குழந்தை இலக்கியப் படைப்புகள்
படைப்புகள் நாட்டுடைமையாக்கம்தி.ஜ.ர.வின் படைப்புகளை தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2006 - 7 ஆம் நிதியாண்டில் 600 ஆயிரம் ரூபாயை அவர்தம் கால்வழியினருக்குப் பரிவுத்தொகையாக வழங்கி நாட்டுடைமை ஆக்கியது. மேற்கோள்கள்தினமணி, பார்த்த நாள்:அக்டோபர் 10, 2012 வெளி இணைப்புகள்பரணிடப்பட்டது 2006-06-29 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia