தீண்டாமை[1] ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வெளிநாட்டவர்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள்[2], குற்றவாளிகள், ஓரினச்சேர்கையாளர்கள், திருநங்கைகள், கழிவகற்றும் தொழில் செய்பவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தீண்டாமை சமூகத்தின் பொது விதிகளுக்கு அமையாதவர்களையும், விதிகளை மீறியவர்களையும் தண்டித்து பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் செயற்பாடாகவும் பயன்பட்டுள்ளது.
தீண்டாமை பரவலாக இந்தியா, இலங்கை, பர்மா, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் தலித்[3] மக்கள் நடத்தப்படும் முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமானதாகும்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள்
தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு.
கிராமப் பஞ்சாயத்து தொலைக்காட்சிகளை தலித்துக்கள் பார்க்கக் கூடாது.
தலித்துகளுக்கு தனியான ரேஷன் கடைகள்.
தலித்துக்கள் ஆடு, மாடு வளர்க்கக் கூடாது.
பொது ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு சில நாட்கள் மட்டும் ஒதுக்குவது
கிராம பொது மேடைகளில் தலித்துக்கள் பேச, பாட முடியாது.
சில கிராமங்களில் தபால்காரர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு தபால் கொடுப்பதில்லை (சொல்லியனுப்பினால் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்)
சில கிராமங்களில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது.
கோவில் திருவிழாக் காலங்களில் ஆதிக்க சக்திகளுக்கு (பழைய ஆண்டைகளில் வாரிசுகள்) தலித்துகள் ஆடுகள் இலவசமாகக் கொடுப்பது.
கோவில் திருவிழா காலத்தில் கையில் காப்பு கட்டிய பிறகு தலித்துக்கள் முகத்தில் முழிக்கக் கூடாது.
செத்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கட்டாயப்படுத்துவது.
மயான வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது.
பறையடிக்குமாறு கட்டாயப்படுத்துவது.
பேருந்து நிறுத்த நிழற்குடையில் தலித்துக்கள் உட்கார முடியாது.
மரணம் நேர்ந்தாலும் அக்குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் சொல்லிக் கட்டாயப்படுத்துவது (பஸ் கட்டணம் மட்டும் தருவார்கள் - உணவு கொடுத்தால் தான் சாப்பிட முடியும்)
ஆதிக்க சக்திகளின் குடும்பத்திற்கு இலவசமாக உடலுறுப்புக் கொடுப்பது (மனம் இருந்தால் உடனடி கிடைக்கும்).
திருமணங்களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது.
தனியார் திருமண மண்படங்களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள்.
வசதி படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது.
கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான்.
பெயர்களில் மரியாதையான பகுதியை வெட்டி விடுவது (மாடகாரியை மாடர், முனியசாமி முலியர்)
மலம் சுமக்க கட்டாயப்படுத்துவது.
பள்ளிக் கூடங்களில் தலித் (அருந்ததியர்) மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது.
வயதான பெரியவர்களையும் ஆதிக்க சாதி சிறுவர்கள் பெயர் சொல்லியும், வாடா, போடா என்றும் அழைப்பது.
தனியார் கல்லூரிகளில் தலித்துக்களை நிர்வாகப் பிரிவில் நியமனம் செய்ய மாட்டார்கள்.
சில பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
தலித் குடியிருப்புகளிலிருந்து பொதுத் தெருவுக்கு செல்ல முடியாமல் தடுப்புச் சுவர் கட்டுவது (உத்தபுரம் சுவர் 600 மீட்டர்).
கிராமங்களில் - சில நகரங்களில் பொதுத்தெருவிலிருந்து தலித் தெருவிற்கு நுழைய முடியாதபடி சுவர்கள் கட்டப்பட்டிருப்பது (வளைவு) இதர ஜாதி தெருக்களில் இப்படி வளைவு இருக்காது.
அரசாங்கமே துப்புறவுப் பணியாளர்களாக தலித் (அருந்தியர்களை) மட்டுமே நியமனம் செய்வது.
அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு காட்டுப்படு தீண்டாமை - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள்.
கூலி வேலை செய்யும் தலித்துக்கள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும்.
தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது.[15]
பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது (தூத்துக்குடி மாவட்டம்).
பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர். [16]
தலித்துகளின் ஊராட்சிகளை போதுமான நிதி ஒதுக்காமல் அரசு நிர்வாகமே புறக்கணிப்பது.
தலித் மக்களவை உறுப்பினர்கள் பணி நிமித்தமாக கூட ஊருக்குள் விடாமல் தடுப்பது.[17]
தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்பட விடாமல் தடுப்பது.
கிராமப் பொதுச் சொத்தில் தலித்துக்களுக்கு பங்கு கிடையாது.[18]
புரவி எடுப்பு விழாவில் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவது[19]
மதம் மாறிய பிறகும் தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் மாற வில்லை என்பதற்கு அடையாளமாக காஞ்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆதி திராவிட அருந்ததிய கிருத்துவர்கள் நேர் வாசல் வழியாக நுழைவதற்கு அனுமதி மறுப்பு.[20]
ஆதிக்க சாதியினரின் வன்கொடுமை பின்புலத்தில், தலித் மாணவர்களுக்காக என தனிப் பள்ளி அமைக்க வேண்டிய அவசியம்.
தலித்துகள் இருக்கையில் அமரக்கூடாது என்பதற்க்காக பேருந்து நிறுத்த நிழற்குடை இருக்கைகளை இடித்தல் .[21]
தலித் மணமக்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்கு பூட்டு போடுதல்[22]
↑[tamil.thehindu.com "24 ஆண்டுகளாக இரட்டை குவளை முறை"], தி இந்து, pp. தமிழகம், September 16, 2013, archived from the original on September 16, 2013, retrieved September 19, 2013{{citation}}: Check |archiveurl= value (help)CS1 maint: date and year (link)