தீயனூர் ஜமதக்னீஸ்வரர் கோயில்
தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சிவபெருமான் திருக்கோயில் ஆகும். பழைமையான தேவார வைப்புத் தலம். [கு 1] தலவரலாறுபரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவர் வில்வ மரங்கள் நிறைந்து வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதனால் இத்தல சிவபெருமான் ஜமதக்னீஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.[1] கல்வெட்டுகள் மூலம் வரலாறுகங்கைகொண்ட சோழபுரம் அமைத்த முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் முதலாம் ராஜாதி ராஜன் (1018-1053) ஆட்சிகால கல்வெட்டுகளில் இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரண்மனைகள், அன்னதானக் கூடங்கள் என இவ்வூர் மிகப்பெரிய நகராக அமைந்திருந்ததை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[1] கும்பாபிஷேகம்இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகிக்கப்படும் இத்திருக்கோயிலில் 22.05.1968 ஆம் வருடமும் 42 வருடங்களுக்குப் பின்னர் ஊர்மக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் உதவியுடன் மதில்சுவர்கள் பராமரிப்பு பணிகள் முடியுமுன்னர் 8.5.2011 ஞாயிற்றுக்கிழமையும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.[2] புதிய பைரவர்இத்திருக்கோயில் முன்பு கவனிப்பாரற்று போக ஆரம்பிக்க இருந்த காலகட்டத்தில் இருந்து வந்த காலபைரவர் சிலை தற்போது காணப்படாததால் 2011 வருட கும்பாபிஷேக சமயம் புதிய பைரவர் சிலை அமைக்கப்பட்டது. பழைமையான காலபைரவர் சிலை திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.[2] குறிப்புகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia