துங்கர்பூர் சமஸ்தானம்
![]() ![]() துங்கர்பூர் சமஸ்தானம் (Dungarpur State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இச்சமஸ்தானம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில் அமைந்த பழைய துங்கர்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் துங்கர்பூர் ஆகும்.1901-இல் இதன் மக்கள் தொகை 100,103 ஆக இருந்தது. வரலாறுதுங்கர்பூர் பகுதியை கிபி 12-ஆம் நூற்றாண்டில் இராஜபுத்திரர்களால் வெல்லப்படும் வரை, பில் பழங்குடி மக்களால் நிறைந்திருக்கப் பெற்றிருந்தது.[1] மேவார் இராஜபுத்திர மன்னர் சமந்து சிங் என்பவர் துங்கர்பூர் அரசை 1197-இல் நிறுவினார்.[2][3] பில் மக்கள் இப்பகுதியில் பெரும்பாண்மை மக்களாகவே உள்ளனர்.[4] 1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் துங்கர்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [5][6][7] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று துங்கர்பூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[8] இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia