இந்த எல்லைக்கோடு முதலில் 1896ல் பிரித்தானிய புவியியல் அறிஞரான் சர் மோர்டிமர் துராந்து என்பவரால் வரையறுக்கப்பட்டதால், இந்த எல்லைக்கோட்டிற்கு துராந்து எல்லைக்கோடு எனப்பெயராயிற்று.
12 நவம்பர் 1893ல் பிரித்தானிய இந்தியா அரசும் மற்றும் ஆப்கானிய அமீர் அப்துர் ரக்மானும் செய்து கொண்ட கந்தமாக் உடன்படிக்கையின் படி துராந்து எல்லைக்கோட்டை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
துராந்து எல்லைக்கோடு வரையறுத்தப் பின்னர் ஆப்கானித்தான் தன்னாட்சியுடன் ஆட்சி செய்தாலும், அதன் வெளியுறவு விவகாரங்களை பிரித்தானிய இந்திய அரசே நிர்வகித்தது.[1][2][3] துராந்து எல்லைக்கோட்டு தொடர்பான ஒப்பந்தப்படி, ஆப்கானித்தான், ருசியாவிற்கும், பிரித்தானிய இந்தியாவிற்கும் இடையே போர் அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டது.[4]
மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போருக்குப் பின்னர் செய்து கொண்ட ஆங்கிலேய - ஆப்கான் ஒப்பந்தத்தின் படி, 1919ல் துராந்து எல்லைக்கோட்டை சிறு மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான் - ஆப்கானித்தானிற்கும் இடையே எல்லையாக உள்ளது. துராந்து எல்லைக்கோட்டு அருகே பாகிஸ்தானின் மேற்கு மற்றும் வடக்கு பலூசிஸ்தான், கைபர் பக்துன்வா மாகாணங்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு வடக்கு நிலங்கள் மற்றும் ஆப்கானித்தானின் வடகிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் உள்ளது.
↑Brig.-Gen. Sir Percy Sykes, K.C.I.E., C.B., C.M.G., Gold Medalist of the Royal Geographical Society (1940). "A History of Afghanistan Vol. II". London: MacMillan & Co. pp. 182–188, 200–208. Retrieved 2009-12-05.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Hay, Maj. W. R. (October 1933). "Demarcation of the Indo-Afghan Boundary in the Vicinity of Arandu". Geographical JournalLXXXII (4).
↑"No Man's Land". Newsweek. United States. February 1, 2004. Archived from the original on 2008-04-08. Retrieved 2011-02-11. Where the imperialists' Great Game once unfolded, tribal allegiances have made for a "soft border" between Afghanistan and Pakistan—and a safe haven for smugglers, militants and terrorists