து. ஜெயக்குமார்
து. ஜெயக்குமார் (D. Jayakumar) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இராயபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இதற்கு முன்னதாக இதே தொகுதியிலிருந்து, 1991, 2001, 2006, 2011 தேர்தல்களில் ஆகியவற்றில் வெற்றிபெற்றார்.[2][3][4] 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றார்.[5] அமைச்சர்ஜெயலலிதா தலைமையிலான 1991 - 96 ஆம் கால அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், வனம், பிற்படுத்தப்பட்டோர் நலம் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.[5] 2001-06 ஆம் கால அமைச்சரவை யில் சட்டம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.[5] சட்டப்பேரவைத் தலைவர்2006இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இவர் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியிலிருந்து 2012 செப்டம்பர் 29 ஆம் நாள் முதல் விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார்.[6] சொந்த வாழ்க்கைஇவரது தந்தையின் பெயர் துரைராஜ். மனைவியின் பெயர் ஜெயக்குமாரி. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1981ஆம் ஆண்டு இளநிலை அறிவியலும் (வேதியியல்), சென்னை சட்டக்கல்லூரியில் 1987இல் இளங்கலைச் சட்டப்படிப்பும் முடித்தார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia