தூங்கெயில் கதவம்தூங்கு எயில் கதவம் என்பது சங்ககாலத்தில் வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு. சங்ககாலக் கட்டடக்கலைஎயில் என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். தூங்குதல் என்னும் சொல் சங்ககாலத்தில் தொங்குதலைக் குறிக்கும். எயிலின் கதவம் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. எயிற்கதவத்தைத் திறக்கும்படி, ஐயவி என்னும் கணையமரத் தாழ் இட்டு அமைப்பதுதான் வழக்கம். இந்தக் கோட்டையை அமைத்த அரசன் கடவுள் அஞ்சி இதன் கதவைத் தொங்கும்படி அமைத்திருந்தான். இக்காலத்தில் மேலே சுருண்டுகொள்ளும் கதவை அமைக்கிறோம். இந்தத் தூங்கெயிற்கதவம் வாயிலின் இருபுற எயில் பிடிப்பில் ஏறி இறங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. கதவு மேலே ஏறி நிற்கும்போது எப்படித் தோன்றும் என்று எண்ணிப் பாருங்கள். வானத்தில் தொங்குவது போலத்தானே தோன்றும். எனவே வானத்து இழைத்த கதவு என்று அதனைக் குறிப்பிட்டனர். கடவுள் அஞ்சி கட்டியதுஇதனைக் கட்டியவன் கடவுள் அஞ்சி என்னும் அரசன். இந்தக் கோட்டைக்குள் வண்டன் என்பவனின் செல்வம் இருந்தது. இந்தக் கோட்டையைச் செல்வத்துக்கு உடைமையாளியான வண்டன் என்பவனே பாதுகாத்துவந்தான். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். அடிப்படைச் சான்றுகடவுள் அஞ்சி வானத்து இழைத்த செம்பியன் எறிந்ததுதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஒரு சோழ மன்னன். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான். அடிப்படைச் சான்று
ஒன்னார்
சார்தல் ![]() ![]() ஒப்பீடுகி.மு. 1867-இல் ஈராக் நாட்டில் கட்டப்பட்டிருந்த தொங்கு தோட்டம் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது. இந்தத் தோட்டத்தை அங்குப் பாயும் யூப்ரட்டீஸ், டைக்ரீஸ் ஆறுகள் மூழ்கடித்தன. இணைத்துப் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia