தூண்டிக்காரன்
தூண்டிக்காரன் என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாடின் சில பகுதிகளில் வணங்கப்படும் தமிழ் நாட்டார் தெய்வம் ஆவார். இவர் சமயத்தில் கிராம் காவல் தெய்வமாக வழிபடும் தெய்வமாவார். இவர் ஆரியர்களின் எதிரி. தூண்டில் காரன் காவல் தெய்வமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வணங்கப்படும் ஒரு தெய்வமாவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தென்னம்புலம் கிராமத்தில் பிறந்து, கருப்பம்புலம் கிராமத்தில் வாழ்ந்து தென்னம்புலம் கிராமத்தில் ஆரிய அரசப்படைகளால் காட்டில் வைத்து சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். ஆபத்து நேரத்தில் ஓடிவந்து காக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். உருவம்இவர் அமர்ந்த நிலையில் கால்கள் இரண்டும் தரையில் படும் வகையில் உட்கார்ந்து இருப்பார்.கால்கள் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கும். இவர் காலடியில் மறைநாய் ஒன்று படுத்திருக்கும். அதன் அருகில் இந்திய நாகம் ஆவேசமாக படம் எடுத்த நிலையில் இருக்கும். |
Portal di Ensiklopedia Dunia