தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)
2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள் என்பது நவம்பர்-திசம்பர் 2015 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளைக் குறிக்கும். இவ்வெள்ளப் பெருக்குகள், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் கோரமண்டலக் கரைப் பகுதிகளைப் பெரிதும் பாதித்தன. குறிப்பாக, சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.[2] ஏறத்தாழ 403 பேர் உயிர் இழந்துள்ளனர். 18 இலட்சம் மக்கள் இடம்பெயர நேரிட்டது. இவ்வெள்ளங்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இந்திய உரூபாய் மதிப்பில் 200 பில்லியனுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. பாதிப்புகள்உயிரிழப்புகள்
தொழிற்துறைக்கு ஏற்பட்ட சேதங்கள்கட்டமைப்புச் சேதங்கள், உற்பத்திப் பாதிப்பு, வேலை வாய்ப்பு இழப்பு என்ற வகையில் 14,000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாக ஆரம்பநிலை கணிப்புகள் தெரிவித்தன. இவற்றுள் ஏறத்தாழ 10,000 நிறுவனங்கள் மிகச்சிறு அமைப்புகளாகும்[3]. அரசு அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள்
சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சீர்கேடுகள்வெள்ளத்தால் பழுதான மற்றும் அடித்துவரப்பட்ட மின்னணுக் கழிவுகள் ஏறத்தாழ 100 டன்கள் எடை கொண்டவை என உத்தேசக் கணிப்புத் தெரிவித்தது[6]. தமிழகம்சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள்மீட்புப் பணிகள்தமிழ்நாடுகாஞ்சிபுரம் மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்[7]. புதுச்சேரி ஒன்றியம்டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 1000 பேர் வரை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோருக்கு 2 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன[8]. தேசியப் பேரிடர் மீட்புப்படையின் இரண்டு அணிகள் புதுச்சேரியில் இயங்கின. உணவு, குடிநீர், விரிப்பு-போர்வைகள் வழங்குதலில் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன[9]. ஆந்திராமழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு 5 இலட்சம் உரூபாய் நிதியுதவி அளித்தது. மிகவும் பாதிக்கப்பட்ட நெல்லூர் மாவட்டத்தில், 140 புனரமைப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. 2 கோடி உரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இந்த மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்டன. இதர அமைப்புகள் உணவுப் பொட்டலங்களையும், விரிப்பு-போர்வைகளையும் வழங்கி உதவின[10] நவம்பர் 24 அன்று 1030 கோடி உரூபாயை வெள்ளச் சேத புனரமைப்புக்காக நடுவண் அரசு ஒதுக்கியது[11]. நிவாரண உதவிகள்நடுவண் அரசின் நிவாரண உதவித் தொகைகள்
வெளிநாடுகளின் உதவிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia