தெமிஸ்ட்டோக்லீன் மதில் சுவர்![]() தெமிஸ்ட்டோக்லீன் சுவர் (Themistoclean Wall, கிரேக்கம்: Θεμιστόκλειον τείχος ), [1] என்பது ஏதெனியன் அரசியல்வாதியான தெமிஸ்டோக்கிளீசின் பெயரால் அழைக்கப்படும் மதில் சுவராகும். இது கிரேக்கத்தின் ஏதென்சில், பாரசீகப் போர்களின் விளைவாகவும், அவர்களின் படையெடுப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் எண்ணத்துடனும் கிமு 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வரலாறு![]() கிரேக்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் பாரசீகப் போர்களானது பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசால் மேற்கொள்ளபட்டது. மன்னர் முதலாம் டேரியசு இந்தப் படையெடுப்பு முயற்சியில் தோல்வியுற்றார். மேலும் அவரது மகனான முதலாம் செர்கசு, கிமு 480 முதல் 479 வரை நீடித்த இரண்டாம் பாரசீகப் போர்களை வழிநடத்தினார். செர்க்செசு தனது தந்தையை விட அதிக வெற்றிகளை ஈட்டினார். ஏதென்சை எரித்து அழித்தார். பாரசீகப் போர்களைத் தொடர்ந்து கிரேக்க நகர அரசுகள் சீர்குலைந்தன. கிரேக்க நகர அரசுகளின் பல கட்டிடங்கள், சிலைகள், கோட்டைகள் போன்றவை அழிக்கப்பட்டன. பாரசீக படையெடுப்பால் கவலையடைந்த ஏதெனிய மக்கள், தெமிஸ்ட்டோக்ளீசின் மதில் சுவர்களை மறுகட்டுமானம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தனர். உயர்ந்துவரும் ஏதென்சின் சக்தியால் பீதியடைந்த, எசுபார்த்தன்களும், அவர்களது பெலோபொன்னேசிய கூட்டாளிகளும் இந்த மதில் சுவரைக் கட்டும் திட்டத்தை எதிர்த்தனர். ஆக்கிரமிக்கவரும் படைகளுக்கு இந்தச் சுவர் ஒரு தடைக்கலாக இருக்கும் என்றும், கொரிந்தின் பூசந்தியின் பாதுகாப்புக்கு தேவையானதாக இருக்கும் என்றும் ஏதெனியர்கள் வாதிட்டனர். எனவே பெலோபொன்னேசியர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மதில் சுவர் கட்டுமானத்தில் ஏதெனியர்கள் தீவிரமாக இருந்தனர். [2] இந்த மதில் சுவர் கட்டுமான நிகழ்வுகளின் போது எசுபார்த்தாவினால் ஏற்பட்ட தடைகளை தெமிஸ்ட்டோகிளீசு என்வாறு சூழ்ச்சிகளைச் செய்து கையாண்டு முடித்தார் என்பதை துசிடிடீஸ், தனது பதிவுகளில், விவரித்துள்ளார். சுவர் கட்டுமானத்தின் போது அவர் எசுபார்த்தன்களின் கவனத்தைத் திசைதிருப்பி மதில் சுவர்கள் கட்டப்பட்டு முடிக்கும் வரை அவர்களின் நடவடிக்கையை தாமதப்படுத்தினார். [3] ![]() தெமிஸ்ட்டோக்லீன் சுவர் கிமு 479 இல் முடிக்கப்பட்டது [4] இது கோவில்கள், சிலைகள் போன்ற பிற இடிபாடுகளை அழித்தது அவற்றில் கிடைத்த பழைய பொருட்களால் கட்டப்பட்டது. [4] ஏனெனில் இப்பணியை எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு விரைவாக கட்டி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் ஏதெனியர்கள் இருந்தனர். இதன் மொத்த நீளம் 8500 மீ, உயரம் 8-10 மீ, அகலம் 3 மீ மேலும் குறைந்தது 13 வாயில்களைக் கொண்டிருந்தது. கிமு 404 இல் பெலோபொன்னேசியப் போரில் தோல்வியடைந்த பிறகு, ஏதெனியர்கள் தங்கள் நகரைச் சுற்றியுள்ள மதில் சுவர்கள் அனைத்தையும் அழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். இருப்பினும், ஏதென்சில் சனநாயகம் மீண்டும் நிறுவப்பட்டபிறகு, கிமு 394 இல் ஏதெனிய தளபதி கோனான் மதில் சுவர்களை சரிப்படுத்தினார். கிமு 338 இல் மாசிடோனிய படையெடுப்பை எதிர்கொண்டபோது, ஒரு சிறிய சுவரானது கூடுதல் தற்காப்புக்காக பிரதானப்பகுதியின் முன்னால் கட்டப்பட்டது. கிமு 86 இல் உரோமானிய தளபதி சுல்லா நகரத்தை முற்றுகையிட்டு தாக்கியபோது சுவர்கள் மோசமாக சேதமடைந்தன. அவை இறுதியில் உரோமானிய மன்னர் வலேரியனால் (கி.பி. 253-260) சில பகுதிகளுடன் மீண்டும் கட்டப்பட்டன. காணக்கூடிய எச்சங்கள்![]() காணக்கூடிய முக்கிய எச்சங்கள்: [5]
வாயில்கள்தெமிஸ்ட்டோக்லீன் மதில் சுவரில் பல வாயில்கள் இருந்தன, அவற்றில் பல முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை:
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia