தேசிய அரண்மனை அருங்காட்சியகம்
தேசிய அரண்மனை அருங்காட்சியகம்(ஆங்கிலம்:NationalPalace Museum) தைபே மற்றும் தைபோ, சியாயி கவுண்டி, தைவான் போன்ற நாடுகளில் உள்ளது. இங்கு, பண்டைய சீன அரசின் கலைப்பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகள் கிட்டத்தட்ட 700,000 என்ற எண்ணிக்கையில் ஒரு நிரந்தர சேகரிப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு கற்காலத்தில் இருந்து நவீன காலம் வரை சீன கலையின் 8,000 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியது.[2] இந்த சேகரிப்பில் பெரும்பாலானவை சீனாவின் பேரரசர்களால் சேகரிக்கப்பட்ட உயர்தர கலைப்பொருட்கள் ஆகும். தேசிய அரண்மனை அருங்காட்சியகம் தடுக்கப்பட்ட நகரில் அமைந்துள்ளது. இது, கலை வேலைப்பாடுகள் மற்றும் கலைப்பொருட்களின் விரிவான சேகரிப்பிற்காக மிங் மற்றும் குயிங் பேரரசுகளின் தொகுப்பின் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும். வரலாறுபெய்ஜிங்கில் நிறுவுதல் மற்றும் இடமாற்றம்தேசிய அரண்மனை அருங்காட்சியகம் முதலில் தடைசெய்யப்பட்ட நகரத்தில் அரண்மனை அருங்காட்சியகமாக, நிறுவப்பட்டது. இது, அக்டோபர் 10, 1925 இல், சீனாவின் கடைசி பேரரசர், புயியை தடைசெய்யப்பட்ட நகரத்திலிருந்த போர்வீரர் ஃபெங் யுக்சியாங் வெளியேற்றிய சிறிது காலத்திலேயே இது நிறுவப்பட்டது.[3][4] இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்கள் முன்னாள் அரச குடும்பத்தின் மதிப்புமிக்க வாழ்க்கையை பறைசாற்றுகின்றன. 1931 ஆம் ஆண்டில், முக்டன் சம்பவம் காரணமாக தளபதி சியாங் கை-ஷேக்கின் தேசியவாத அரசாங்கம், அருங்காட்சியகத்திற்கு அதன் மிக மதிப்புமிக்க பொருட்களை நகரத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டது. ஏனெனில், அவை இம்பீரியல் சப்பானிய இராணுவத்தின் கைகளில் சிக்காமல் தடுப்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்தது. இதன் விளைவாக, 1933 பிப்ரவரி 6 முதல் மே 15 வரை, அரண்மனை அருங்காட்சியகத்தின் 13,491 கூடை கலைப்பொருட்கள் மற்றும் பண்டைய கலைப்பொருட்கள் கண்காட்சி அலுவலகம், கோடைக்கால அரண்மனை மற்றும் இம்பீரியல் ஹான்லின் அகாடமி ஆகியவற்றின் 6,066 கூடை கலைப்பொருட்கள் ஆகியன ஐந்து குழுக்களின் மூலம் ஷாங்காய்க்கு மாற்றப்பட்டன.[5] 1936 ஆம் ஆண்டில், தாவோயிஸ்ட் மடாலயமான சாவோடியன் அரண்மனையில் சேமிப்பகத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் சேகரிப்பு நாஞ்சிங்கிற்கு மாற்றப்பட்டது.[6] இரண்டாம் உலகப் போரின் பெரும் மோதலில் ஒன்றிணைந்த இரண்டாம் சீன-ஜப்பானியப் போரின்போது இம்பீரியல் ஜப்பானிய இராணுவம் உள்நாட்டிற்கு முன்னேறியதால், சேகரிப்பு மூன்று வெவ்வேறு வழிகளாக மேற்கு நோக்கி அன்சுன் மற்றும் இலோசன் உள்ளிட்ட பல இடங்களுக்கு 1945 இல் ஜப்பான் சரணடையும் வரை எடுத்துச்செல்லப்பட்டது. 1947 ஆம் ஆண்டில், அது மீண்டும் நாஞ்சிங் கிடங்கிற்கு அனுப்பப்பட்டது. தைவானுக்கு வெளியேற்றம்ஜப்பானியர்கள் சரணடைந்ததைத் தொடர்ந்து சீன உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியது. இதன் விளைவாக தளபதி சியாங் கை-ஷேக் கலைப்பொருட்களை தைவானுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இது 1945 இல் ஆர்.ஓ.சி.யிடம் (ROC) ஒப்படைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத படைகளுக்கு இடையே 1948 இல் சண்டை மோசமடைந்தபோது, தேசிய பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் பிற ஐந்து நிறுவனங்கள், மிகவும் மதிப்புமிக்க சில பொருட்களை தைவானுக்கு அனுப்ப முடிவு செய்தன.[7] பின்னர் அருங்காட்சியகத்தின் இயக்குனரான ஹேங் லி-வு, 1948 டிசம்பர் மற்றும் 1949 பிப்ரவரிக்கு இடையில் நாஞ்சிங்கிலிருந்து தைவானின் கீளூங்கில் உள்ள துறைமுகத்திற்கு சில தொகுப்புகளை மூன்று குழுக்களாக கொண்டு செல்வதை மேற்பார்வையிட்டார். பொருட்கள் தைவானுக்கு வந்த நேரத்தில், கம்யூனிஸ்ட் இராணுவம் ஏற்கனவே தேசிய பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியக சேகரிப்பைக் கைப்பற்றியது. எனவே சேகரிப்பு அனைத்தும் தைவானுக்கு அனுப்பப்படவில்லை. தடைசெய்யப்பட்ட நகரத்திலிருந்து மொத்தம் 2,972 கூடை கலைப்பொருட்கள் தைவானுக்கு மாற்றப்பட்டன. அவை முதலில் தெற்கே கொண்டு செல்லப்பட்ட கூடைகளில் 22% மட்டுமே இருந்தன, இருப்பினும் இந்த எண்ணிக்கை சேகரிப்பில் மிகச் சிறந்தவையாக கருதப்படுகிறது. குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia