தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) (राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान), முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும். 1989ல் இந்திய அரசின்மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது. [1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.
இது இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக பின்வரும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் காரணமாகத் திகழ்கிறது. 2004-2009 ஆண்டுகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைத் தேர்வுகளுக்கு சுமார் 1.5 மில்லியன் மாணவர் சேர்க்கை ஒட்டுமொத்தமாக இருந்தது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350000 மாணவர் சேர்க்கையும் இருக்கிறது.[2]