தேசிய திறன் மேம்பாட்டு முகமைதேசிய திறன் மேம்பாட்டு முகமை (National Skill Development Agency) இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சிக்கும் ஒரு அமைப்பாகும். இது முழு தன்னாட்சி அமைப்பு. இது இந்திய மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில் அமைக்கப்பட்டது. [1] மே 9, 2013 அன்று, [2] மத்திய அமைச்சரவை இந்த அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இந்திய மத்திய அமைச்சரவை ஜனவரி 31, 2013 அன்று ஒரு கூட்டத்தை நடத்தியது. இதில் தேசிய திறன் மேம்பாட்டு முகமையை உருவாக்கும் திட்டத்திற்கு முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தை அமைச்சர்கள் குழு பரிசீலித்த பின்னர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ( யுபிஏ ) அரசாங்கம் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. [3] கொள்கை, கட்டமைப்பு, தரங்கள்தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் கொள்கை 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2015 ஆம் ஆண்டில் தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தை தொடங்கிவைத்தார். பயிற்சிக் கட்டணம், நடைமுறைகள், மதிப்பீடு, சான்றளிப்பு உள்ளிட்ட பொது நெறிகள் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பொது நெறிகள், இதர அமைச்சகங்களின் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. தேசிய திறன் தகுதி கட்டமைப்பு அமலாக்கத்தின் மூலம் நான்கு ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் தகுதிகள் உருவாக்கப்பட்டன.[4] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia