தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Electronics and Information Technology) பல்வேறு நிலைகளில் தகவல் தொழினுட்பம் மற்றும் மின்னணுவியல் பயிற்சிகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். முன்னதாக மின்னணுவியல் மற்றும் கணினி படிப்புகளின் அங்கீகாரத் துறை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு தன்னாட்சி அறிவியல் சங்கமாக இந்நிறுவனம் இயங்குகிறது.[1] புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு தற்போது நாடு முழுவதும் அகர்தலா, ஐஸ்வால், அச்மீர், அலவல்பூர், ஔரங்காபாத், புவனேசுவர், கோழிக்க்ப்ப்டு, சண்டிகர், சென்னை, சுச்சுயிம்லாங்கு, சுராசந்த்பூர், தாமன், தில்லி, திப்ருகார், திமாபூர், காங்டாக், கோரக்பூர், குவகாத்தி இட்டாநகர், சம்மு, இயோர்காட்டு, கார்கில், கோகிமா, கொல்கத்தா, கோக்ரசார், குருசேத்ரா, இலக்கன்பூர், லே, லக்னோ, உலுங்கிலே, மசூலி, மண்டி, பாசிகாட்டு, பாட்னா, பாலி, ராஞ்சி, ரோபர், சேனாபதி, சில்லாங், சிம்லா, சில்சார், தேச்பூர், சிறீரீநகர், தூரா மற்றும் தெசூ என 47 மையங்கள் செயல்படுகின்றன.[2][3][4] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia