தேன்சிந்துதே வானம்
தேன் சிந்துதே வானம் (Then Sindhudhe Vaanam) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] நடிகர்கள்
பாடல்கள்வி. குமார் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல் வரிகளும் கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டது. 'உன்னிடம் மயங்குகிறேன்' எனும் பாடல் கே. ஜே. யேசுதாஸ் அவர்களால் பாடப்பட்ட பிரபலமான பாடலாகும்.[5] மேலும் இப்பாடலுக்கு இளையராஜா அவர்கள் கிடார் வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.[6] நடிகை மனோரமா அவர்களும் இப்படத்தில் 'வா வா குட்டப்பா' எனும் பாடல் பாடியுள்ளார். 'எழுதாத பாடல் ஒன்று' என்று தொடங்குற பாடல் காட்சியை ஊட்டி பொட்டானிகல் கார்டனில் படமாக்கப்பட்டது. சலீம்தான் நடன ஆசிரியர் என்றாலும், கமல்தான் இந்தப் பாடலுக்கு நடனம் உருவாக்கி ராணிசந்திராவுடன் ஆடினார். அடிப்படையில் கமலும் நடன ஆசிரியர் என்பதால், மூன்று நாள் எடுக்க வேண்டிய பாடலை வேகமாக படமாக்கி ஒன்றரை நாளிலேயே முடித்தார்.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia