தேஷ்ராஜ் படேரியாதேஷ்ராஜ் படேரியா இந்திய நாட்டுப்புற இசைப்பாடகர் ஆவார். இவர் இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்.இவர் புந்தேலி மொழியி்ன் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் இந்திய அளவிலும் உலக அளவிலும் அறியப்படுகிறார். தொடக்க கால வாழ்க்கைதேஷ்ராஜ் படேரியா, இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்டத்தின் திந்தானி என்னும் ஊரில் 1953ஆம் ஆண்டில் ஜூலை 25ம் நாள் பிறந்தார். பள்ளிக்கல்வியை முடித்தபிறகு இசைத்துறையில் பட்டயப்படிப்பை நிறைவு செய்தார். சுகாதாரத் துறையில் பணியிலமர்ந்த பின் மாலை நேர விழாக்களில் பாடல்கள் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இசை வாழ்க்கை1972ஆம் ஆண்டில் தேஷ்ராஜ் மேடை பாடகராகத் தன் இசைவாழ்வைத் தொடங்கினார். அத்துடன் சத்தர்பூர் வானொலியிலும் பாடத்தொடங்கினார். தொடர்ந்து 1980களில் நாட்டுப்புற இசைத்தட்டுகள் பரவலாக வெளிவரத் தொடங்கியபின் படேரியா நாட்டுப்புறப் பாடகராக பிரபலமானார். இறப்புதேஷ்ராஜ் படேரியா தனது 67வது வயதில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.[1][2][3][4] படேரியா கடந்த 50 ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.[5] இசைப்பணிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia