தொன்னூல் விளக்கம்தொன்னூல் விளக்கம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். வீரமாமுனிவர் என அறியப்பட்டவரும், கான்சுடன்டைன் சோசப்பு பெசுக்கி (Costanzio Giuseppe Beschi) [1680-1746] என்னும் இயற்பெயர் கொண்டவருமான இத்தாலியப் பாதிரியார் இந்நூலை இயற்றினார். இது 1730 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு[1], 1838-ஆம் ஆண்டில் புதுவையில் முதன்முறையாகப் பதிப்பிக்கப் பட்டது. ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. அமைப்புஇந்நூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
என்பனவாம். மொத்தம் 370 பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40 பாக்களும், சொல்லதிகாரத்தில் 102 பாக்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100 பாடல்களும், அணியதிகாரத்தில் 70 பாடல்களும் உள்ளன[2] சிறப்பு
உரைஇந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இவ்வுரையில் பழந்தமிழ் நூல்களிலிருந்தும், தானே எழுதிய பிற நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுப் பாடல்களை ஆசிரியர் தருகிறார்.
குறிப்புகள்பதிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia