தொல்காப்பியம் புணரியல் செய்திகள்தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாக உள்ளது. முதலாவது எழுத்ததிகாரத்தில் நான்காவது இயலாக அமைந்துள்ளது, புணரியல். இந்த இயலில் 40 நூற்பாக்கள் உள்ளன. எழுத்துகள் 33. புணர்ச்சியின் பாகுபாடுகள்எழுத்து நோக்கு
மொழி நோக்கு
திணை நோக்கு
பொருள் நோக்கு
புணர்ச்சியில் நிகழ்வனஇயல்பு
புணர்ச்சியில் தோன்றும் சாரியைஅக்கு, அம், அற்று, அன், ஆன், இக்கு, இன், ஒன், வற்று, பிற எழுத்துச் சாரியைஎழுத்துகள் இவ்வாறு சாரியை பெற்று வரும்.
உடம்படுமெய்தொல்காப்பியர் உடம்படுமெய் ஒலிகள் குறித்துப் புணரியலில் சுருக்கமாகப் பேசியிருக்கிறார். “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்” (புணரியல், நூ. 38) (மொழி - சொல்; உருவு - வடிவு; கொளல் - சேர்த்துக் கொள்ளுதல்; வரையார் - நீக்கார்.) ‘எல்லா உயிர் ஈற்றுச் சொற்களுக்கும் முன்னர், உயிரை முதலாகக் கொண்ட சொற்கள் வரும்பொழுது, அவ்விரு சொற்களுக்கும் இடையே உடம்படுமெய்யினது வடிவைச் சேர்த்துக் கொள்ளுதலை நீக்கார்’ என்பது இந்நூற்பாவின் பொருளாகும். இந்நூற்பாவில் தொல்காப்பியர், நிலைமொழியின் இறுதி உயிர்க்கும் வருமொழியின் முதல் உயிர்க்கும் இடையே உடம்படுமெய் வரும் என்று பொதுப்படக் கூறியுள்ளாரே தவிர, எந்தெந்த மெய்கள் உடம்படுமெய்யாக வரும் என்று கூறவில்லை. இருப்பினும் இந்நூற்பாவிற்கு உரை வரைந்த இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தொல்காப்பியர் உடம்படுமெய் என்று குறிப்பிடுவது யகரமும், வகரமும் ஆகும் எனக் கொள்கின்றனர். அவ்வுரையாசிரியர்கள் இருவரும், இந்நூற்பாவில் தொல்காப்பியர் வரையார் (நீக்கார்) என்று கூறியிருப்பது கொண்டு, உடம்படுமெய் இரண்டு உயிர்களுக்கு இடையே கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்பதில்லை எனவும், கிளி அரிது, மூங்கா இல்லை (மூங்கா- கீரி) என்றாற் போல அமைந்து வரும் சொற்றொடர்களில் இரண்டு உயிர்களுக்கு இடையில் உடம்படுமெய் இல்லாமலும் வரலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர். உரையாசிரியர்களின் இக்கருத்தை இக்கால மொழியியலாரும் உடன்படுகின்றனர். இவ்வாறு தொல்காப்பியரது நூற்பாவிற்கு விளக்கம் காண வாய்ப்பிருந்தாலும் கூட, ஒருமொழிச் சந்தியில் உடம்படுமெய் இல்லாமல் சொற்கள் வருவது தமிழ்மொழியில் இல்லை. சான்று: கிளி + ஆ = கிளியா. கிளி, ஆ என்னும் இருசொற்கள் கிளியா என ஒரு சொல்லாகப் புணர்ச்சியில் இணைந்து விடுவதால் இதனை ஒருமொழிச் சந்தி என்பர். (மொழி - சொல்; சந்தி - புணர்ச்சி). ஒருமொழிச் சந்தியில் இவ்வாறு உடம்படுமெய்யுடன் வருவதே நல்ல மொழிநடையாகக் கருதப்படுகிறது. இதை விடுத்து, கிளி + ஆ = கிளிஆ என்று உடம்படுமெய் இல்லாமல் சொல் அமைவது வழக்கல்ல. அதே நேரம் கிளி + அன்று என்பது, கிளியன்று என உடம்படுமெய் பெற்றோ, கிளிஅன்று என உடம்படுமெய் பெறாமலோ அமையலாம். கிளி + அன்று = கிளியன்று எனவும், கிளி அன்று எனவும் இருசொல்லாகவே இணைந்து வருவதால் இவை இரண்டும் இருமொழிச் சந்தி எனப்படும். இவ்வாறு கட்டாயம் வரவேண்டிய இடத்தில் உடம்படுமெய் பெற்றும், கட்டாயம் இல்லாத இடத்தில் உடம்படுமெய் பெற்றும் பெறாமலும் வரலாம் என்ற விளக்கத்தைக் கூறுவதற்கு ஏற்ற வகையில் தொல்காப்பியரின் இந்நூற்பா இடம் தருகிறது. தொல்காப்பியர் காலத்தில் இரண்டு உயிர்கள் ஒன்று சேர்ந்து, உடம்படுமெய் எதுவும் பெறாமல் வழங்கியதற்கு அவரது நூலிலேயே சில சான்றுகள் காணப்படுகின்றன. தற்காலத்தில் நாய் என்று நாம் குறிப்பிடும் சொல், தொல்காப்பியர் காலத்தில் நாய் எனவும், நாஇ எனவும் இருவேறு வடிவில் வழங்கியது. இதனை, “இகர யகரம் இறுதி விரவும்” (மொழிமரபு, நூ.25) என்ற தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாவால் அறியலாம். ‘நாஇ’ என்ற சொல் உடம்படுமெய் பெற்ற வருவதாக இருந்தால், நாயி (நா+ய்+இ) என யகர உடம்படுமெய் பெற்றே வரவேண்டும். ஆனால், உடம்படுமெய் பெறாமல் ‘நாஇ’ என்று வழங்கியுள்ளது. ‘நாஇ’ என்ற சொல்லில் உடம்படுமெய் இல்லாமலேயே ஆ, இ என்னும் இரண்டு உயிர்கள் இணைந்து நிற்பதைக் காணலாம். அதுபோலத் தொல்காப்பியர் காலத்தில் ‘தேஎம்’ என்ற சொல்லிலும், ‘கோஒன்’ என்ற சொல்லிலும் உடம்படுமெய் இல்லாமலேயே இரண்டு உயிர்கள் சேர்ந்து வருவதைக் காண்கிறோம். (தேஎம்- தேயம், நாடு, இடம்; கோஒன் - அரசன் அல்லது தலைவன்). இவ்விரு சொற்களையும் சிலர் அளபெடைச் சொற்கள் என்று கூறுவர். அது பொருந்தாது. ஏனெனில் இவ்விரு சொற்களில், ‘கோஒன்’ என்ற சொல்லில் உள்ள ‘ஒன்’ என்பதைச் சாரியை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். சான்று: கோ + கை = கோஒன்கை (அரசனது கை) மேலே கூறியவற்றால் தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை என்பது விருப்பநிலையிலே இருந்தது எனலாம் பொதுச்செய்திகள்
சிறப்புச் செய்திகள்
நிலைமொழி
வருமொழி
வேற்றுமை
சாரியை
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia