நடராசபத்து
நடராசப் பத்து, சிதம்பரம் நடராசர் மீது சிறுமணவூர் முனுசாமி என்பவரால் பாடப்பட்டது. விருத்த வகையைச் சேர்ந்த பத்துப் பாடல்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. இப்பாடல்கள், "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என முடிவதாக அமைந்துள்ளன. இப்பாடல்களை இயற்றிய முனுசாமி முதலியார், திருவள்ளூர் தாலுக்காவில் தற்போது சிறுமணைவை என வழங்கப்படும் ஊரிலே சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நடராசர் அடியவராவார். முதலாவது பாடல் 'மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ' என ஆரம்பிக்கின்றது. கீழேயுள்ள இரண்டாவது பாடல் நடராசர் நடனமாடும்போது புல்லிலிருந்து கடல் வரை எவையெல்லாம் ஆடுகின்றன என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மானாட மழுவாட மதியாட புனலாட வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia