நந்தினி அரிநாத்நந்தினி அரிநாத் (Nandini Harinath) இந்தியாவின் கருநாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இசுரோவின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) செயற்கைக்கோள் மையத்தில் ஏவூர்தி அறிவியலார் ஆவார்.[1] இவர் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் (மங்கள்யானின்) பங்கேற்றுள்ளார். பயணத் திட்டமிடல், பகுப்பாய்வு, செயல்பாடுகள் பற்றிய உட்கூறுகளின் உருவரை குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையை இவர் இணைந்து எழுதியுள்ளார். . வாழ்க்கைதொலைக்காட்சியில் புகழ்பெற்ற ஸ்டார் ட்ரெக் தொடர்தான் நந்தினிக்கு அறிவியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. இவரது தாயார் ஒரு கணித ஆசிரியர்; இவரது தந்தை ஒரு பொறியாளர். ஒரு குடும்பமாக இவர்கள் அனைவரும் அறிவியல் புனைகதை, ஸ்டார் ட்ரெக்கில் ஆர்வம் கொண்டிருந்தனர்.[2] இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[3] தொழில் வாழ்க்கைஇசுரோவில் இவர் 20 ஆண்டுகளாகப் பணிபுரிகிறார். இந்த 20 ஆண்டுகளில் 14 பயணங்களில் பணியாற்றியுள்ளார்.[1] திட்ட மேலாளராகவும் திட்ட வடிவமைப்பாளராகவும் மங்கள்யான் எனும் செவ்வாய் சுற்றுகலத் திட்டத்தில் துணைச் செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றினார். வெளியீடுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia