நரம்பு சிலந்தி நோய்
டிராகுன்குலியாசிஸ் (Dracunculiasis), நோய்க்கு இன்னொரு பெயர் நரம்பு சிலந்தி நோய் (guinea worm disease-GWD). இது நரம்பு சிலந்தியால் ஏற்படும் ஒரு தொற்று.[1] நரம்பு சிலந்தி வளர்புழு தொற்றுடைய நீர் வாழும் தெள்ளு பூச்சியுள்ள தண்ணீரைப் பருகும் நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று வருகிறது.[1] ஆரம்பத்தில் நோய் அறிகுறிகள் ஏதும் தெரிவதில்லை .[2] சுமார் ஓராண்டு கழித்து, நோய்வாய்பட்டவருக்கு எரிச்சலுடன் கூடிய ஒரு வலி ஏற்படுகிறது. பொதுவாகப் பெண் புழுக்களால் காலின் கீழ் பகுதி சருமத்தில் கொப்பளங்கள் தோன்றுகிறது.[1] சில வாரங்கள் கழித்து அந்த புழு சருமம் வழியாக வெளியேறுகிறது[3] இந்த காலகட்டத்தில் நடப்பதோ, வேலை பார்ப்பதோ சிரமமாக இருக்கும் .[2] இந்த நோய் காரணமாக இறக்க நேரிடுவது சாதாரணமாக நிகழ்வதில்லை..[1] காரணம்மனிதர்களைத் தவிர வேறு எந்த விலங்கினத்தையும் இந்த புழு நோய் தாக்குவதில்லை .[2] இந்த புழுக்கள் சுமார் 2 மில்லிமீட்டர் அகலம் இருக்கும். முதிர்ந்த பெண் புழுக்கள் 60 லிருந்து 100 மில்லிமீட்டர் நீளத்திலும் இருக்கும். (ஆண் புழுக்கள் மிகவும் நீளம் குறைந்தவையாக இருக்கும்.) மனித உடலுக்கு வெளியே இதன் முட்டைகள் 3 வார காலம் உயிரோடிருக்கும் .[1][2] .[4] அதற்கு முன்பாகவே நீர் வாழும் தெள்ளு பூச்சிகளால் அவை உண்ணப்படவேண்டும்.[1] நீர் வாழும் தெள்ளு பூச்சிகளுக்குள் இந்த வளர்புழுக்கள் நான்கு மாதங்கள் வரை உயிரோடிருக்கும்.[4] இவ்வாறு இந்த நோய் ஒரு பகுதியிலுள்ள மனிதர்களிடம் பரவ ஒவ்வொரு ஆண்டும் சில காலம் அந்தப் பகுதியில் தங்கியிருக்க வேண்டும்.[5] பொதுவாக இந்த நோய்த்தொற்று, அறிகுறிகளை வைத்து கண்டறியப்படுகிறது..[6] தடுப்பு மற்றும் சிகிச்சைஆரம்பகால நோய்கண்டறிதல் மூலம் இந்த நோயைத் தடுக்கலாம். மேலும் நோய் தொற்றுள்ளவர் அவரது காயம் அல்லது புண் குடிநீரை மாசுபடுத்தாமல் பார்த்து கொள்ளவேண்டும்.[1] பிற முயற்சிகள் பின்வருமாறு:
இந்த நோய்க்கு மருந்தோ தடுப்பூசியோ கிடையாது.[1] இந்த புழுக்களை மெதுவாக ஒரு குச்சியை அதன் மீது உருட்டி ஒரு சில வாரங்களில் அகற்றலாம்.[2] வளர்ந்து வரும் புழுக்களால் ஏற்படும் புண்களில் நுண்ணுயிரி தொற்று ஏற்படும்.[2] புழுக்களை அகற்றிய பிறகும் கூட வலி சில மாதங்களுக்கு தொடரலாம்.[2] நோய்ப்பரவு இயல் மற்றும் வரலாறு2013 ஆம் ஆண்டு இந்த நோய் 148 நபர்களைத் தாக்கியதாக அறிவிக்கப்பட்டது.[1] 1986 இல் ஏற்பட்ட பாதிப்புக்களை விட இது பத்து லட்சம் குறைவு.[2] ஆப்ரிக்காவில் 4 நாடுகளில் மட்டுமே இந்த நோய் உள்ளது. 1980 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தை விட இது 20 நாடுகள் குறைவாகக் கொண்டுள்ளது[1] அதிகமாகப் பாதிப்புள்ள நாடு தெற்கு சூடான்.[1] இது முதலாவதாக ஒழிக்கபடும் ஒட்டுண்ணி நோய் ஆக இருக்கலாம்.[7] நரம்புச் சிலந்தி நோய் பண்டைய காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒன்று.[2] எகிப்திய மருத்துவ குறிப்பான எபர்ஸ் பாப்பிரசில் இந்நோய் குறித்து கி.மு. 1550 ஆம் ஆண்டே குறிப்பிடபட்டுள்ளது.[8] டிராகுன்குலியாசிஸ் என்ற பெயர் லத்தீன்மொழியில் இருந்து வந்தது "பறவைநாக துயர்", என்று அதற்கு பொருள்.[9] ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் மேற்கு ஆப்ரிக்காவின் கடலோரப் பகுதியான கினி யில் இந்த நோயைக் கண்ட பிறகே நரம்பு சிலந்தி ("guinea worm") என்ற பெயர் வந்தது.[8] கினி புழுக்கள் போன்ற வேறொரு இனம் பிற விலங்குகளில் இந்த நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. [10] இவை மனிதர்களைப் பாதிப்பதில்லை.[10] இது ஒரு புறக்கணிக்கபட்ட வெப்பமண்டலம் சார்ந்த நோய் என்று வகைப்படுத்தபட்டுள்ளது .[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia