நர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள்நர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காடுகள் மத்திய இந்தியாவில் உள்ள வெப்ப வலய, துணை வெப்பவலய வறண்ட அகன்ற இலைக் காடுகள் சூழலியல் மண்டலம் ஆகும். இச் சூழலியல் மண்டலத்தின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. எனினும் இதன் பகுதிகள் சட்டிஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன.[1] அமைவுநர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காடுகள், கீழ் நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்கு, சூழவுள்ள மேட்டுநிலங்கள் ஆகியவற்றில் 169,900 சகிமீ (65,600 சதுரமைல்) பரப்பளவில் அமைந்துள்ளன. நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்கு கிழக்கு-மேற்காக அமைந்த, தட்டையான அடியையுடைய ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது இரண்டு மேட்டுநிலங்களைப் பிரிக்கின்றது. விந்திய மலைத்தொடர் நர்மதைப் பள்ளத்தாக்கின் வடக்கு எல்லையாகும். இம் மலைத்தொடர், நர்மதைப் பள்ளத்தாக்கை மால்வா மேட்டுநிலம், புந்தேல்கண்ட் உயர்நிலம் ஆகியவற்றிலிருந்து பிரிக்கிறது. நர்மதைப் பள்ளத்தாக்கின் தெற்கு எல்லையில் உள்ள சத்புரா மலைத்தொடர் இப் பள்ளத்தாக்கை தக்காண மேட்டுநிலத்தில் இருந்து பிரிக்கிறது. இச் சூழலியல் மண்டலம் சத்புராவின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியிருப்பதோடு, தென்கிழக்கு நோக்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியோரம் விரிவடைகிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia