நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே (Nalla Perai Vaanga Vendum Pillaigale) என்பது 2024 இல் பிரசாத் இராமர் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் செந்தூர் பாண்டியன், பூர்ணிமா ரவி, பிரீத்தி கரண், சுரேஷ் மதியழகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்தை பிரதீப் குமார் தயாரித்தார்.[2] நடிகர்கள்
தயாரிப்புஇத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2018 இல் தொடங்கப்பட்டு, மதுரை,மயிலாடுதுறை போன்ற இடங்களில் 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.[3][4] இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவிடமிருந்து "ஏ" சான்றிதழைப் பெற்றது.[5] வரவேற்புசினிமா எக்சுபிரசின் பி. ஜெயபுவனேசுவரி. 5 இற்கு 3 என்று மதிப்பிட்டு "எல்லாவற்றிற்கும் மேலாக, தலைப்பே" "ஒரு நல்ல பெயரைத் தேடுகிறது" என்று பொருள் தருவதாகவும் "படத்தின் குழு ஒன்று நல்ல முடிவைத் தருகிறது" என்றும் குறிப்பிட்டார்.[6] டைம்ஸ் நவ் மணிகண்டன் கே. ஆர். திரைப்படத்திற்கு 5இற்கு 2 + 1⁄2 என்று மதிப்பிட்டு "இயக்குநர் பிரசாத் இராமர் தனது கதையை நம்பியதாகத் தெரிகிறது, இது நாம் வாழும் காலத்துடன் ஒத்துப்போகிறது என்றும், அவரது உரையாடல்கள் எல்லாவற்றையும் விட பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதாக அவர் நம்புகிறார்" என்றும் குறிப்பிட்டார்.[7]21⁄2 சினிமா விகடனின் விமர்சகர் ஒருவர், "திரைப்படம் தொடங்கி, கதைக்குள் நேராக இழுக்கிறது, இது தலைப்பு அட்டையில் ஒரு வித்தியாசமான முயற்சியாகும். என்று எழுதினார்.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia